இப்பவே ஃபீல்ட்அவுட் ஆக்கிட்டாங்களே... புலம்பும் பிக்கப் நடிகர்!
அடுத்தடுத்த தோல்விகளின் விளைவாக தன்னை தமிழ் சினிமாவே மறந்துவிட்டதாக ஃபீல் பண்ணுகிறாராம் பிக்கப் நடிகர்.
வரிசையாக தோல்விகளை பார்த்த பின்னர் காட்டன் ஹீரோ டைரக்டர் இயக்கத்தில் சாண்டல் ஹீரோ படத்தை பெரிதும் எதிர்பார்த்து நடிக்க தொடங்கினார். மேலும் அந்த படம் வெற்றி பெறும் வரை வெளியில் தலைகாட்டமாட்டேன் என்றும் சபதம் எடுத்தார்.
அந்த இயக்குநரின் ஹிஸ்டரி தெரியாமல் அப்படி ஒரு சபதம் எடுத்தது தவறு என்று இப்போது ஃபீல் பண்ணுகிறாராம். படம் ஃபைனான்ஸ் பிரச்னையால் அப்படியே நிற்கிறதாம். இன்னும் ஒரு ஆண்டோ அதற்கு மேலோ கூட ஆகலாம் என்று கேள்விபட்ட நடிகர் ஷாக் ஆகிவிட்டாராம்.
இன்னும் மூணு மாசம் வெளில வராம இருந்தா ஆள் இருக்கறதையே மறந்துடுவாங்க ப்ரோ, பார்த்துக்குங்க...!
Comments


Click it and Unblock the Notifications