கண்டிப்பா பிளாப் தான்.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்.. பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்த நடிகை!
சென்னை: பட ரிலீஸ் வந்த உடனே அந்த பிரபல நடிகை தனது பிரம்மாஸ்திரத்தை எடுத்து விடுகிறாரே பலே கில்லாடி தான் என சினிமா வட்டாரத்தில் பல பிரபலங்களே பேசி வருகின்றனர்.
உடல் நலக்குறைவு ஏற்பட்டு விட்டதால் படுத்த படுக்கையாகி விட்டேன். இனிமேல், எந்திருக்கவே முடியாது என தன் மீது பெரும் சிம்பதியை அந்த நடிகை கிளப்பி இருந்தார்.

அப்படி பேசியும் கண்ணீர் விட்டு அழுதும் முந்தைய படத்தை பிரம்மாதமாக ஓட வைத்து விட்டார் அந்த நடிகை என குற்றச்சாட்டுக்கள் கிளம்பி உள்ளன.
மத்த நேரம் எல்லாம் நல்லா இருக்காரு: அந்த பிரபல நடிகை மத்த நேரம் எல்லாம் நல்லா இருக்காரு என்றும் ஆனால், புதிய படம் ரிலீஸ் ஆகும் போது மட்டும் அப்படியே அப்பாவி போலவும், உடல் நலம் முடியாதவர் போல தன்னைக் காட்டிக் கொண்டு ரசிகர்களின் அனுதாபங்களை அள்ளி வருகிறார் என பரவலான பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.
கண்ணீர் விட்டால் கலெக்ஷன்: நடிகை தன்னால் எதுவும் முடியாது என்றும் இதுதான் கடைசி படமாக இருக்கலாம் என்பது போலவும் நாடகம் ஆடி கண்ணீர் விட்டே கலெக்ஷனை அள்ளி விடுகிறார் என பிரபல நடிகை ஒருவரே நடிகையின் சமீபத்திய போக்குகள் பற்றி பேசியிருப்பது பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது.

ரொம்ப நல்லாத்தான் இருக்காரு: அந்த படம் வெற்றிப் பெற்ற நிலையில், டிராமாவை எல்லாம் கலைத்து விட்டு நான் ரொம்பவே நல்லா இருக்கேன். எனக்கு புதிய பட வாய்ப்புகளை கொடுங்க என தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அத்தனை வாய்ப்புகளையும் அள்ளிக் குவித்திருக்கிறாராம் அந்த நடிகை.
மோசமான ரிப்போர்ட்: ஏற்கனவே அந்த பெரிய பொருட்செலவில் உருவான தனது படத்தின் சிஜி காட்சிகள் சரியில்லை என்பதால் அதன் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்து விட்டு பல கரெக்ஷன்களை நடிகை பண்ணச் சொல்லியிருக்கிறார். ஆனால், என்னதான் பண்ணினாலும் படம் பெரியளவில் வெற்றிப் பெற வாய்ப்பில்லை என்கிற அதிர்ச்சி ரிப்போர்ட்டுகள் வெளியான நிலையில், நடிகை தனது பிரம்மாஸ்திரத்தை மீண்டும் எடுத்துள்ளார் என்கின்றனர்.
பிரம்மாஸ்திரத்தை எடுத்த நடிகை: விரைவில் புதிய படம் வெளியாக உள்ள நிலையில், ஏற்கனவே பிளாப் ஆகிவிடும் என ரிப்போர்ட்டுகள் வெளியான நிலையில், தான் மீண்டும் தனது உடல் நலத்தை காரணம் காட்டி பேட்டிகளிலும், நிகழ்ச்சிகளிலும் கண்ணீர் விட்டு ரசிகர்களை கவர முயற்சி செய்து வருகிறார் அந்த பிரபல நடிகை என சக நடிகை ஒருவரே பேசியிருப்பது சினிமா வட்டாரத்தில் பெரும் ஷாக்கை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











