கன்னத்துல கை வச்சு நடிக்க சொன்ன இயக்குநர்.. கண்ட இடத்துல பட்ட கை.. பளார் விட்ட நடிகை!
சென்னை: படப்பிடிப்பு தளத்தில் நடிகையை திடீரென தொடக்கூடாத இடத்தில் இளம் நடிகரின் கை பட்ட நிலையில், பளார் என அறை விழுந்தது செட்டையே அதிர வைத்து விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.
ஜில் நடிகை ரொம்பவே படங்களை தேர்வு செய்து நடிகர்களுடன் நடித்து வருகிறார். கடின உழைப்பு போட்டு நடித்து வரும் அந்த நடிகை ரொம்பவே கறாரான பார்ட்டி என்பது தெரிந்த விஷயம் தான்.

அட்ஜெஸ்ட்மென்ட் எல்லாம் பண்ண முடியாது என்றும் கிடைக்கும் வாய்ப்புகளை வைத்தே நடித்து சம்பாதித்துக் கொள்கிறேன் என ஒரு கண்ணியமான முடிவுடன் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் அந்த நடிகையை அத்துமீறி இளம் நடிகர் தொட்டதாகவும் அதற்கு நடிகை கன்னத்தில் ஓங்கி ஒண்ணு விட்டதாகவும் பேச்சுக்கள் புகைந்து வருகின்றன.
ஜில் நடிகை: நடிக்கும் படங்கள் பெரிதாக ஓடவில்லை என்றாலும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் அந்த ஜில் நடிகை. கிளாமர் எல்லாம் காட்டாமல் நடிப்புத் திறமையை காட்டி நடிக்கிறேன் என ரொம்ப நாளாக நடித்து வரும் நடிகைக்கு சமீப காலமாக அதெல்லாம் செட்டாகாது என்று தெரிந்த நிலையில், சமீப காலமாக கிளாமர் காட்டியும் நடிக்கும் முடிவை எடுத்து விட்டதாக கூறுகின்றனர்.
நெருக்கமான காட்சி: சமீபத்தில் ஒரு படத்தில் நடிகையுடன் நெருக்கமான காட்சியில் அந்த நடிகர் நடிக்கும் போது கன்னத்தில் கை வைத்து ரொமான்ஸ் பண்ண இயக்குநர் சொல்லியதாகவும் ஆனால், நடிகையை டைட்டான உடையில் பார்த்ததும் கன்ட்ரோலை இழந்த நடிகர் கன்னத்தில் கை வைத்து நடித்து விட்டு இறக்கும் போது அப்படியே அந்த இடத்தில் கை பட்டு விட்டதாம்.
கன்னத்தில் பளார்: நடிகை டென்ஷன் ஆனது தெரிந்த உடனே தெரியாமல் பட்டு விட்டதாக அந்த நடிகர் உடனடியாக மன்னிப்பு கேட்டும், நடிகரின் உள்நோக்கத்தை தெரிந்து கொண்டு நடிகை ஷூட்டிங் ஸ்பாட் அத்தனை பேர் இருக்காங்க என்றும் பார்க்காமல் அறைந்து விட்டாராம்.
அந்த அறைக்கு பிறகு நடிகையுடன் நெருங்கி நடிக்கவே அந்த நடிகர் பயந்தார் என்றும் பல முறை தெரியாமல் தான் பட்டது மன்னித்து விடுங்கள் என கேட்டும் நடிகை அந்த நடிகரை கண்டுக் கொள்ளாமல் விட்டு விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.


Click it and Unblock the Notifications











