கேவலமான பிசினஸ் செய்து சிக்கிய கணவர்.. கழுத்தளவு கடனில் மாட்டி முழிக்கிறாராம் அந்த பிரபல நடிகை?
சென்னை: இளம் நடிகைகளை வைத்து ஆபாச படங்கள் இயக்கி வெளிநாடுகளுக்கு விற்பனை செய்த கேவலமான பிசினஸ் செய்த விவகாரத்தில் அந்த பிரபல நடிகையின் கணவர் சிக்கி சிறைக்கு சென்ற நிலையில், திரும்பி வந்தும் அவருக்கு எந்தவொரு தொழிலும் கை கொடுக்கவில்லையாம்.
கணவரை காப்பாற்ற பெரிய தொகையை கடனாக வாங்கிய நடிகை தனக்கும் பெரியளவில் பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், கடன் நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.

மீண்டும் தனது நண்பர் மூலமாக ரகசியமாக அந்த தப்பான தொழிலை ஆரம்பித்தால் தான் கடனில் இருந்து தப்பிக்க முடியும் என கணவர் சொன்ன யோசனைக்கு தேவையே இல்லை வேறு வழி யோசிக்கலாம் என பிடிவாதமாக மனைவி நடிகை மறுத்து விட்டதாக கூறுகின்றனர்.
இந்தியா முழுவதும் பிரபலம்: தனது இளமை காலத்திலேயே தனது நடிப்புத் திறமையால் இந்தியா முழுவதும் பிரபலமானவர் அந்த நடிகை. பல்வேறு மொழிகளில் சினிமாவில் நடித்து சம்பாதித்த அத்தனை நல்ல பெயரையும் அவரது ஆசை கணவர் பணத்தாசை காரணமாக பாழாக்கி விட்டார். அந்த பிரச்சனைக்கு பின்னர் கணவரை விவாகரத்து செய்து விடலாம் என்றே நடிகை முடிவெடுத்தாலும் அவரது மனசு கேட்காமல் கணவரை காப்பாற்ற பல முயற்சிகளை மேற்கொண்டு கடைசியில் சிறையில் இருந்து வெளியே கொண்டு வந்து விட்டார்.
ஆபாச படங்கள்: மனைவியே பெரிய நடிகையாக இருக்கும் போது தயாரிப்பாளர் என்கிற போர்வையில் அந்த நடிகையின் கணவர் கேவலமான தொழிலை செய்து பணம் சம்பாதித்துள்ளார். இளம் நடிகைகள், கல்லூரி பெண்கள் உள்ளிட்டோரை ஆசை வார்த்தை காட்டி மயக்கி ஆபாச படங்களை எடுத்து அதை வெளிநாட்டினருக்கு விற்பனை செய்து சம்பாதித்து வந்த நிலையில், வசமாக சிக்கி மொத்த இமேஜும் டோட்டல் டேமேஜ் ஆக்கிக் கொண்டார்.
பல கோடி கடன்: அதற்கு பிறகு அந்த நடிகைக்கும் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், கணவரை காப்பாற்ற வட்டிக்கு கடன் வாங்கியது குட்டி போட்டு பல கோடியாக மாறி தற்போது கழுத்தை நெறிப்பதாக கூறுகின்றனர். ஆனாலும், மீண்டும் பழைய பிசினஸ் பண்ண வேண்டாம் என்றும் ஓடிடியில் சில வெப்சீரிஸ்களில் நடித்து சம்பாதித்து கடனை கட்டலாம் என்கிற முடிவுக்கு நடிகை வந்திருப்பதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











