அந்த நடிகையுடன் நெருக்கம்.. வீட்டுக்கே கூட்டி வந்து அசிங்கம்.. மனைவி கடுப்பாக இதுதான் காரணமா?
சென்னை: பிரபல நடிகை கணவரை விட்டு பிரிய காரணமே இளம் நடிகையுடன் சமீப காலமாக அந்த நடிகர் போடும் தப்பான ஆட்டம் தான் காரணம் என பகீர் கிளப்பி உள்ளனர்.
ஏற்கனவே அந்த இடுப்பழகி உடன் கணவர் கனெக்ஷனில் இருந்த விஷயம் மனைவிக்கு தெரிய வந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய பிரச்சனையே வெடித்தது.
அதன் பின்னர் மாமனார் தலையிட்டு நடத்திய பஞ்சாயத்தில் அந்த நடிகை ஆள் அட்ரஸே தெரியாமல் சினிமாவை விட்டே விலகி விட்டார்.

பலருடன் காதல்: ஆரம்பத்தில் அந்த நடிகையின் அழகில் மயங்கி பல முன்னணி நடிகர்களும் அவரை காதலித்து வந்தனர். அந்த பிரபல நடிகருடன் சில ஆண்டுகள் லிவிங் டுகெதரிலேயே அந்த நடிகை இருந்துள்ளார். ஆனால், அதையெல்லாம் மறந்து விட்டு இன்னொரு நடிகர் அந்த நடிகையைத் தான் திருமணம் செய்வேன் என அடம் பிடிக்க அவரது அப்பா பேசி முடித்து திருமணம் செய்து வைத்தார்.
நடிகையுடன் கசமுசா: நடிகைக்கு 40 பிளஸ் வயதான நிலையில், கணவருக்கு மனைவி மீது ஆரம்பத்தில் இருந்த மோகம் எல்லாம் தீர்ந்து போய் விட்டதாம். இடுப்பழகி நடிகையுடன் ரகசியமாக இல்லற வாழ்க்கையே நடத்த ஆரம்பித்த நிலையில், அந்த விவகாரம் நடிகையின் காதுகளுக்கு எட்ட பெரிய பிரச்சனையை அப்பவே பண்ணி நடிகரை பிரிய பார்த்திருக்கிறார். ஆனால், சில பஞ்சாயத்துகள் மூலம் சமரசம் ஆன நடிகை மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.
சேட்டை அடங்கல: ஆனால், நடிகரின் சேட்டை அடங்கவில்லை என்றும் லேட்டஸ்ட்டாக இளம் நடிகை ஒருவருடன் உறவில் இருந்து வருகிறார் என அரசல் புரசலாக தகவல்கள் கசிந்ததும் நடிகைக்கு பிபி எகிறி விட்டது. அனைத்துக்கும் மேல் யாருமில்லாத நேரத்தில் அந்த நடிகையை தனது வீட்டுக்கே கொண்டு வந்து நடிகர் செய்த சேட்டையை அறிந்த மனைவி கோபத்தின் முடிவில் இதுக்கு மேல எனக்கு இங்கே இடமில்லை என்கிற முடிவுக்கே வந்து விட்டதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. ஆரம்பத்தில் ரகசியமாக இருந்த இந்த விவகாரம் தற்போது சினிமா வட்டாரம் முழுக்க காட்டுத்தீ போல பற்றிக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











