தனித்தனி படுக்கை.. கணவரை கழட்டிவிட காத்திருக்கும் ஃபயர் நடிகை.. அந்த காரணம் தானா?
மும்பை: பெயரிலேயே ஃபயரை கொண்டிருக்கும் அந்த பிரபல நடிகைக்கும் அவரது கணவருக்கும் சமீப காலமாக செட்டே ஆகவில்லை என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
ஆரம்பத்தில் இருந்தளவுக்கு இருவரும் சமீப காலமாக நெருக்கமாக இருப்பது கிடையாது என்றும் பொது இடங்களிலேயே அடிக்கடி அவர்களுக்குள் இருக்கும் இடைவெளியை தாராளமாக வெளிப்படுத்தி வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

அனைத்திற்கும் மேலாக, வீட்டிலேயே இருவரும் ஒன்றாக படுப்பது இல்லை என்றும் தனித்தனி படுக்கையறைகளில் தான் சில நாட்களாகவே இரவுப் பொழுதை கழிப்பதாகவும் ரகசிய தகவல்கள் கசிந்து சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன: ஃபயர் நடிகைக்கும் அந்த கோமாளி நடிகருக்கும் இடையே திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகின்றன. அதற்கு முன்னதாக இருவரும் திரைப்படங்களில் இணைந்து நடித்தபோதே இருவருக்கும் இடையே ஏற்பட்ட ஃபயர் காரணமாக காதலித்து வந்தனர். பிரம்மாண்டமாக திருமணத்தையும் நடத்தி முடித்தனர்.
குழந்தை இல்லை: ஆனால், 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் இருவருக்கும் இடையே தாம்பத்ய உறவில் ஏதோ சிக்கல் இருப்பதாகவும் அதன் காரணமாகவே குழந்தை பிறக்கவில்லை என்றும் கூறுகின்றனர். தற்போது நடிகரை விட்டு அந்த நடிகை விலக முடிவு செய்ய காரணமே அந்த நடிகரால் ஒரு குழந்தையைக் கூட கொடுக்க முடியவில்லையே என்பது தான் என பகீர் கிளம்பி உள்ளது.
கணவரை கழட்டி விட முடிவு: இனிமேல், இந்த நடிகரால் எந்தவொரு பிரயோஜனமும் இல்லை என்கிற தீர்மானத்துக்கே அந்த நடிகை வந்து விட்டாராம். சினிமாவுக்காக குழந்தை பெற்றுக் கொள்வதை நடிகை தான் தவிர்த்து தள்ளிப் போட்டு வருகிறார் என இதுவரை கிளம்பிய பேச்சுக்களையும் ஏச்சுக்களையும் சகித்துக் கொண்டிருந்த அந்த நடிகை இனிமேலும், பொறுத்துக் கொள்ள வேண்டாம் என்கிற முடிவுக்கே வந்து கணவரை விரைவில் கழட்டி விட திட்டமிட்டு இருப்பதாக கூறுகின்றனர்.

ஆனால், நடிகை மீது அதீத காதலில் இருக்கும் கணவர் அவரை விட்டுப் பிரிய மனமே இல்லாமல் தொடர்ந்து அவரிடம் கெஞ்சி ஒன்றாக இருக்கலாம் என்றே பேச்சுவார்த்தை நடத்தி வருவதால் தான் அந்த நடிகை இதுவரை அமைதி காத்து வந்தார் என்றும் ஆனால், இதற்கு மேல் இந்த விவகாரத்தில் அவர் பெரிய முடிவை எடுக்கும் நிலைக்கே சென்று விட்டதாக பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.
மனைவியின் இந்த திடீர் முடிவால் கணவர் நடிகர் மிகவும் வருத்தத்தில் இருப்பதாகவும் எப்படியாவது மனைவியின் மனதை மாற்றி அவருடனே வாழ வேண்டும் என்கிற முயற்சியை மேற்கொண்டு வருகிறார் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











