4 முறை அது நடந்துடுச்சு.. அதான் அந்த டாப் ஹீரோயின் திருமணமே வேண்டாம்னு முடிவெடுக்க காரணமாம்?
சென்னை: கோலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த அந்த நடிகை இன்னமும் திருமணம் செய்துக் கொள்ளாமல் இருக்க இப்படியொரு சிக்கலான காரணம் இருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் பரவி வருகின்றன. பெரிதாக நடிப்பு திறமை எல்லாம் இல்லை என்றாலும் தனது அழகாலும் வசீகரத்தாலும் ஏகப்பட்ட ரசிகர்களை பல ஆண்டுகள் கட்டிப் போட்டு வைத்தவர் அந்த பிரபல நடிகை.
ஆரம்பத்தில் சினிமாவுக்குள் அடியெடுத்து வைக்க சில சீனியர் ஹீரோக்களிடமே அட்ஜெஸ்ட்மென்ட் செய்து தான் அந்த நடிகை நுழைந்திருக்கிறார் என்றும் பதற வைக்கின்றனர்.

ஏகப்பட்ட கசமுசா வேலைகளை பார்த்து வந்த நடிகை ஒரு கட்டத்தில் அந்த டாப் நடிகருடன் ரொம்பவே நெருக்கமாக பழக ஆரம்பித்து விட்டாராம்.
காதலில் விழுந்த நடிகை: டாப் நடிகருடன் நடிகை நெருக்கமான நிலையில், இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கத் தொடங்கி விட்டனர் என்றும் ரகசியமாக குடும்பம் நடத்தி வந்ததாகவும் கிசுகிசுக்கள் அந்த காலத்திலேயே கோடம்பாக்கத்தில் அனல் பறந்தன. ஆனால், அதன் பின்னர் அந்த நடிகர் எல்லாம் முடிந்த பின்னர் நடிகையை கழட்டி விட்டு விட்டாராம்.
கருக்கலைப்பு: நடிகருடன் நெருக்கமாக பழகிய நிலையில் எந்தவொரு சேஃப்டியும் இல்லாமல் அந்த கவர்ச்சி நடிகை போட்ட ஆட்டம் காரணமாக கரு உண்டான நிலையில், அதனை உடனடியாக கலைத்து விட்டாராம். அடுத்து நடன இயக்குநர் ஒருவருடன் நடிகைக்கு பந்தம் ஏற்பட ஆரம்பித்து அவருடனும் இல்லற வாழ்க்கையை திருட்டுத்தனமாக நடத்தி வந்திருக்கிறார்.
4 முறை: அடுத்தடுத்து சில நடிகர்களுடன் நட்பாக பழகியும் சினிமா பட வாய்ப்புக்காக தப்பாக பழகியும் வந்த அந்த நடிகை 4 முறை காதல் தோல்வியை சந்தித்த நிலையில், கடுப்பாகி விட்டாராம். இனிமேல் எவனையும் நம்பக் கூடாது என்றும் குழந்தை பெற்றுக் கொள்ளவும் தன்னால் இனிமேல் முடியாது என்றும் யாருக்கும் உண்மையாக இருக்க முடியுமா? தனது கடந்த கால கசப்பான அனுபவங்களை சொல்லி விட்டால், உடனடியாக தன்னை காதலர்கள் பிரிந்து சென்று விடுகின்றனர் என்பதால் தான் நடிகை இத்தனை ஆண்டுகள் ஆகியும் திருமணமே தேவையில்லை என்றும் சந்தோஷமாக இருக்கும் வரை இருந்து விட்டு போய் விடலாம் என்கிற முடிவுக்கே வந்து விட்டார் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











