நல்லவேளை கேமராவை நம்ம பக்கம் திருப்பல.. வாரிசு நடிகை வாங்கிய அடி.. பயத்தில் கிரஷ் நடிகை.. ஏன்?
சென்னை: தென்னிந்தியாவில் தான் இயக்குநர்கள் தொப்புள் மற்றும் மார்பகங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்கிற குற்றச்சாட்டு சமீபத்தில் வாரிசு நடிகையின் எல்லை மீறிய கிளாமர் காட்சிகளால் பெரிதாக கிளம்பிய நிலையில், வட இந்தியாவில் பிகினி உடையில் நடித்துள்ள கிரஷ் நடிகை பயத்தில் உள்ளார் என்று கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
கால் அழகி முதல் பல முன்னணி நடிகைகளும் இந்தி படங்களில் இட்லி துணியுடன் தான் நடித்து வருகின்றனர். மேலும், டாப்லெஸ், லிப் லாக் காட்சிகள் உள்ளிட்டவை பாலிவுட்டில் தான் அதிகம் என்றும் தென்னிந்திய சினிமா வளர்ந்து வரும் நிலையில், பொறாமை காரணமாகவே டார்கெட் செய்வதாகவும் பஞ்சாயத்துக்கள் வெடித்து வருகிறது.

இந்த பிரச்னை இப்படியே போனால் பல நடிகைகள் இன்ஸ்டாகிராமில் எக்ஸ்போஸ் செய்து போட்டோக்களையும் வீடியோக்களையும் கூட போட முடியாதே என நெட்டிசன்கள் நக்கல் அடித்து வருகின்றனர்.
உடலை காட்சிப்பொருளாக பயன்படுத்தக் கூடாது: ஹாலிவுட் சினிமாக்களில் நடிகைகள் மற்றும் நடிகர்கள் கூட தங்கள் ஒட்டுமொத்த உடலையும் சொந்த விருப்பத்தின் பேரில் காட்சிப்படுத்தி நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை உலகளவில் கவர்ந்து வருகின்றனர். இங்கேயும் பல நடிகர்களும் நடிகைகளும் இன்ஸ்டாகிராம் முதல் சினிமா, வெப்சீரிஸ் என எல்லை மீறிய கவர்ச்சி உடைகளில் தோன்றி நடித்தும், எல்லை மீறிய உடலுறவு காட்சிகள், லிப் லாக் காட்சிகளில் நடிக்கும் போதெல்லாம் இதுதான் எங்கள் தொழில் என்றும் அதில் ஒன்றும் தவறு கிடையாது என்றும் சொல்லி வந்த நிலையில், தற்போது தென்னிந்திய இயக்குநர்கள் அதிகம் தொப்புளுக்கே ஃபோகஸ் செய்கின்றனர் என சமீபத்தில் வெளியான வாரிசு நடிகை படத்தை காலி பண்ண கிளப்பப்பட்ட பஞ்சாயத்து பல நடிகைகளுக்கும் பேக் ஃபயர் ஆக்விட்டது என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
கிரஷ் நடிகை கலக்கம்: எல்லா நடிகைகளும் பாட்டு நடிகை போல இழுத்து மூடிக்கொண்டு நடித்தால் நடிக்கத் தெரிந்தால் கூட பரவாயில்லை பிழைத்துக் கொள்வார்கள். இல்லை என்றால் அழக் கூடத் தெரியாத அந்த வாரிசு நடிகை போல நிலைமை மாறிவிடுமே என்கிற அச்சம் எழுந்துள்ளது என்றும் கூறுகின்றனர். பல கோடி சம்பளத்தில் கிரஷ் நடிகை நடித்துள்ள புதிய படத்தில் டூ பீஸ் அணிந்துக் கொண்டும் எல்லை மீறிய கவர்ச்சியை காட்டி நடித்துள்ள நிலையில், அந்த படத்துக்கு என்ன மாதிரியான பஞ்சாயத்து வெடிக்கும் என்கிற கேள்வி எழுந்துள்ளதாம்.


Click it and Unblock the Notifications