twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இரண்டு பேருமே சரி கிடையாது.. எல்லாம் கொஞ்ச நாள் ஆட்டம் தான்.. புது ஜோடிக்கு சாபம் விட்ட பிரபலம்!

    By Staff
    |

    சென்னை: புதிதாக திருமணம் செய்து கொண்ட ஜோடி பற்றி பிரபலம் ஒருவர் பேசிய பேச்சு கோடம்பாக்கத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்து கொண்டோம் என மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லி வரும் அவர்கள் மத்தியில் நிஜத்தில் எந்தவொரு உண்மையான லவ்வும் இல்லை என பேசி உள்ளார்.

    ஏற்கனவே ஏகப்பட்ட பேருடன் பகையை வளர்த்துக் கொண்டு வரும் அந்த ஜோடி பப்ளிசிட்டிக்காக செய்யும் செயல்கள் எல்லாம் இன்னும் கொஞ்ச நாளில் பல் இளித்து விடும் என ஒரே போடாக போட்டு இருப்பது பலரையும் ஷாக் ஆக்கி உள்ளது.

    புஷ்பா 2ம் பாகத்தில் பழங்குடி பெண்ணாக நடிக்கும் சாய்பல்லவி? ஆனால் இதுதான் உண்மையான அப்டேட்புஷ்பா 2ம் பாகத்தில் பழங்குடி பெண்ணாக நடிக்கும் சாய்பல்லவி? ஆனால் இதுதான் உண்மையான அப்டேட்

    புது ஜோடி

    புது ஜோடி

    இப்படியொரு ஜோடி திருமணம் செய்து கொள்வார்கள் என யாருமே எதிர்பார்க்காத நிலையில், திடீரென திருமணம் செய்து கொண்டு அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தனர். திருமணம் செய்த புதிய ஜோடிக்கு வாழ்த்துக்களுக்கு பதிலாக ட்ரோல்கள் தான் குவிந்து வருகின்றன. ஆனால், அதை பற்றியெல்லாம் கவலைப் படாமல் தங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக அவர்கள் ஸ்டார்ட் செய்துள்ளனர்.

    எல்லாமே செட்டப்

    எல்லாமே செட்டப்

    எப்படி இருந்தாலும், தங்களை பற்றி நெகட்டிவ் கமெண்ட்ஸ் தான் வரும் என அறிந்து கொண்ட அந்த பிரபலங்கள் இருவரும், சில விஷயங்களை முன் கூட்டியே செட்டப் செய்து விட்டு இருந்ததாகவும், அதன் காரணமாக புதிய பெரிய பிரச்சனைகள் ஏதும் அவர்களை நெருங்காமல் தடுத்து விடும் என திட்டமிட்டு இருந்தனர் எனக் கூறப்படுகிறது.

    பிரபலத்துடன் சண்டை

    பிரபலத்துடன் சண்டை

    ஆனாலும், அனைத்தையும் மீறி அந்தவொரு பிரபலத்துடன் கருத்து மோதல் எழுந்த நிலையில், இந்த புதிய ஜோடி பற்றி அவர் பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சாபம் விடாத குறையாக அந்த பிரபலம் வயிற்றெரிச்சல் காரணமாக அப்படி பேசி உள்ளார் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

    கொஞ்ச நாள் ஆட்டம்

    கொஞ்ச நாள் ஆட்டம்

    இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் அல்ல, காதல் என்று சொல்லப்படுவது எல்லாம் சும்மா ஊரை ஏமாற்ற, கூடிய விரைவிலேயே இவர்கள் ஆட்டம் சிரிப்பா சிரிக்கப் போகுது என அந்த பிரபலம் சாபம் விடுவதை போல பேசியிருப்பது கோடம்பாக்கத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

    அந்த பொறாமை

    அந்த பொறாமை

    புது ஜோடி உடன் ஏற்பட்ட சண்டை மட்டுமின்றி தன் வாழ்க்கையும் அப்படித்தான் பாதியிலேயே நின்று போனதால், அந்த பொறாமை தான் அந்த பிரபலத்தை இப்படி பேச வைத்திருக்கிறது என்கின்றனர். எப்படி இருந்தாலும், இப்போதைக்கு இப்படி அவர் பேசியிருக்கக் கூடாது என அவரது நண்பர்களே அட்வைஸ் செய்து வருகின்றனர்.

    English summary
    Popular celebrity cursing newly married couple for this reason shocks everyone in Kollywood Industry.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X