விவாகரத்து இப்போ வேண்டாம்.. அந்த நடிகைக்கு அதிர்ச்சியை கொடுத்த மனைவி.. என்ன ஆச்சு?
சென்னை: சட்டுபுட்டுனு விவாகரத்து மேட்டர் முடிந்தால் அடுத்து அந்த பிரபலத்தை திருமணம் செய்துக் கொள்ளலாம் என நடிகை போட்டு வைத்திருந்த கணக்கு எல்லாம் தவிடு பொடியாகி விட்டது என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
அந்த பிரபலத்தை உருகி உருகி காதலித்து பல ஆண்டுகள் குடும்பம் நடத்தி குழந்தைகள் எல்லாம் பெரியவர்களாக திருமண வயதை அடைந்த நிலையில், கணவன் - மனைவிக்கு இடையே ஒரு நடிகையால் திடீரென வெடித்த பிரச்னை விவாகரத்து வரை சென்றுவிட்டது.

ஆனால், இன்னமும் தனது கணவரை விட்டு பிரிய மனைவிக்கு விருப்பமே இல்லையாம். சேர்ந்து வாழவும் கணவர் செய்த துரோகம் மற்றும் குழந்தைகளுக்கு நேர்ந்த அவமானம் உள்ளிட்டவை அந்த பிரபலத்தின் மனைவியை படாதபாடு படுத்தி வருகிறதாம்.
விவாகரத்து இப்போ வேண்டாம்: விவாகரத்து மேட்டர் நீதிமன்றம் வரை வந்த நிலையில், விவாகரத்து இப்போ வேண்டாம் என்கிற முடிவில் தான் பிரபலத்தின் மனைவி உள்ளார் என்கின்றனர். ஆனால், வழக்கை வாபஸ் செய்தால் வேறு சில பிரச்னைகள் வெடிக்கும் என்பதால், வழக்கை இழுத்தடிக்கும் எண்னத்திற்கு வந்துள்ளார் என்றும் தொடர்ந்து வழக்கை நீட்டித்திக்கொண்டே செல்லும் ஐடியாவில் உள்ளார் என்று கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
நடிகைக்கு அதிர்ச்சி: எப்படியாவது சீக்கிரம் விவாகரத்து மேட்டர் செட்டில் ஆகிவிட்டால், அடுத்து அந்த பிரபலத்தை முறைப்படி திருமணம் செய்துக் கொள்ளலாம் என கொக்கு போல காத்திருக்கும் நடிகைக்கு பிரபலத்தின் மனைவியின் இந்த திடீர் முடிவு பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது என்கின்றனர். அந்த பிரபலம் யாரை சமாதானப்படுத்துவது, யாரை சரி கட்டுவது, தலைக்கு மேல் பல பிரச்னைகள் உள்ள நிலையில், இதற்கு இப்போதைக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாத நிலையில் உள்ளதால் நடிகை ரொம்பவே அப்செட்டாகி உள்ளார் என்று கூறுகின்றனர்.
வேறு வழி இல்லை: இப்போதைக்கு இந்த விவகாரத்தில் அவசரப்பட்டாலோ அல்லது அவசரப்படுத்தினாலோ எந்தவொரு லாபமும் தனக்கு இருக்காது என்றும் இப்போதைக்கு அமைதியாக இருப்பதை தவிர வேறு வழியில்லை என்கிற நிலைக்கு அந்த நடிகை தள்ளப்பட்டுள்ளார் என்கின்றனர். அதே போல மனைவியும் தனது குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொரு விஷயத்தையும் அவசரப்படாமல் செய்ய முடிவெடுத்துள்ளார் என்று பேச்சுக்கள் புகைந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications