twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இன்னும் யார் மீதும் காதல் வரவில்லை!-ப்ரியாமணி

    By Chakra
    |

    Priyamani
    நடிகைகள் காதல் பற்றி செய்தி வருவதும், அதை சம்பந்தப்பட்ட நடிகைகள் மறுப்பதும், பின்னர் ஒரு நாள் மாலையும் கழுத்துமாக நிற்பதும், அடுத்த சில மாதங்களில் அல்லது வருடங்களில் நீதிமன்றப் படி ஏறுவதும் தொன்று தொட்டு நடக்கிறது.

    ப்ரியாமணி இப்போது இரண்டாம் கட்டத்தில் இருக்கிறார். அவரை ப்ருத்விராஜா, ஜெகபதிபாபு என நான்கைந்து ஹீரோக்களுடன் இணைத்து செய்திகள் வந்துவிட்டன. அவற்றில், ஜெகபதி பாபுவுடனான காதலை மட்டும் மறுத்து விளக்கம் அளித்து வருகிறார் ப்ரியாமணி.

    தொடர்ந்து இருவரும் நான்கு படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். விரைவில் இருவருக்கும் திருமணம் என்றும் கூறப்படுவது பற்றி ப்ரியாமணி கூறுகையில், "எனக்கு திருமணம் என்றால் அதை பகிரங்கமாக சொல்வேன். நான் எதற்காக பயப்பட வேண்டும். ஆனால் உண்மையில் எனக்கு யார்மீதும் இன்னும் காதல் வரவில்லை. நெருங்கிய நட்பையெல்லாம் காதல் என்று எழுதுவதற்கு நானா பொறுப்பு. காதல் வந்தாலும் அது கல்யாணத்தில் முடிந்தாலும், நிச்சயம் அனைவருக்கும் சொல்வேன்!" என்றார்.

    English summary
    Priyamani denies the gossip about her love affair with Jagapathy Babu. She told that she hadn"t any love affair with any of the hero in either Tollywood or Kollywood. According to the actress, she will declare her love and marriage once it confirmed.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X