Don't Miss!
- News நாங்க ஆகம விதி நிபுணர்கள் அல்ல.. பிடிஆர் தாயிடம் செங்கோல் தர எதிர்க்கும் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
- Finance பெங்களூர் தண்ணீர் பஞ்சத்தில் இப்படியொரு பிரச்சனையா..? அதிர்ச்சியான விஷயம் தான்..!
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Sports மும்பை இந்தியன்சின் ஏமாற்று வேலைக்கு இனி ஆப்பு.. புதிய நடைமுறையை கொண்டு வந்த ஐபிஎல் நிர்வாகம்
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ப்ரியாமணியை தவிக்க விட்ட நயனதாரா நயன்தாராவின் பேரைக் கேட்டாலே பிற கோலிவுட் நாயகிகள் சந்திரமுகி ஜோதிகா மாதிரி ஆவேசமாகி விடுகிறார்கள்.ஐயாவில் அறிமுகமாகி அடுத்த படத்திலேயே சூப்பர் ஸ்டாருடன் சந்திமுரகியில் நடித்து, டாப் கியரில் பிக் அப் ஆகி வரும்நயன்தாராவின், கையில் இப்போது நிறைய படங்கள்.கவர்ச்சி காட்டத் தயார், சம்பளம் பத்திப் பிரச்சினை இல்லை, முக்கிய ரோலாக மட்டும் இருக்க வேண்டும் என்றப்ரீ-கண்டிஷன்களுடன் நயன்தாரா தரப்பு இயக்குனர்களையும், தயாரிப்பாளர்களையும் படு வேகத்தில் அணுகி வருகிறது.நயனின் மேனேஜருக்கு முக்கிய வேலையே வாய்ப்பு வேட்டை தான். அவருக்கு புத்தம் புதிய லேட்டஸ்ட் காரை வாங்கித்தந்துவிட்ட நயனதாரா, கோடம்பாக்கத்தில் ஒரு தயாரிப்பாளர் விடாமல் பார்க்கச் சொல்லியிருக்கிறார்.கிரவுண்ட் வொர்க்கை மேனேஜர் பார்க்க, அடுத்த கட்டமாக தானே பிக்சரில் வருகிறார் நயனதாரா. ஒரு போன்.. ஒரு கொஞ்சல்,அப்படியே நாம் 3வது பாராவில் சொன்ன வார்த்தைகளை எடுத்து வைக்கிறார். தேவைப்பாட்டால் ஒரு நேரடி சந்திப்பும்நடக்கிறது.இப்படியாக அசுர வேகத்தில் டீல்களை முடித்து இளம் நடிகர்கள் முதல் தாத்தாக்கள் வரை அனைத்துத் தரப்பையும் கையில்போட்டு வருகிறார்.இதன்மூலம் ஏற்கனவே சில நாயகிகளுக்குப் போக இருந்த படங்களும் நயன்தாரா பக்கம் போய்விட்டன. தனது திறமையானஅணுகுமுறையால் பிறரது வாய்ப்புக்களை அமுக்கி வரும் நயனதாரா மீது கோலிவுட் அழகிய ராட்சசிகள் கோபப்படாமல் இருக்கமுடியுமா?மேலும் தான் நடிக்கும் படங்களில் யாராவது இன்னொரு ஹீரோயினும் இருந்தால் அவரது ரோலை அப்படியேகமுக்கமாக்கிவிடும் வேலைகளையும் ஆரம்பித்துவிட்டார் இந்த கேரளத்து சேச்சி.இவரது இந்த வேலையால் நொந்து போயிருக்கிறார் இன்னொரு கேரளத்து பட்சியான ஆசின். கஜினி படத்தில் நாயகியாகப்போடப்பட்டவர் ஆசின் தான். இப்போது அசினின் ரோல் நயனதாராவுக்கும் ஆசினுக்கு நயனதாரா செய்ய இருந்த சாதாரணரோலும் மாற்றித் தரப்பட்டுவிட்டது.நயனுக்கு இயக்குனர் அதிக முக்கியத்துவம் தருவதாக நினைக்கும் ஆசின், படத்திலிருந்தே கழன்று விடலாமா என்று கூடயோசித்து வருவதாக சொல்கிறார்கள்.ஆசினோடு இப்போது ப்ரியா மணியின் கடுப்பையும் சம்பாதித்திருக்கிறார் நயன்தாரா. ப்ரியாமணியும் பாலக்காட்டைச் சேர்ந்தகேரளத்து சிட்டு தான்.தமிழில் பட வாய்ப்புகள் சிக்காமல், மலையாளத்தில் அப்படி இப்படி ரோல்களிலும் நடிக்கத் துணிந்து விட்ட ப்ரியா மணியைத்தேடிப் போயிருக்கிறார் தமிழ்ப் படத் தயாரிப்பாளர் ஒருவர்.வந்தவரை வரவேற்ற ப்ரியா, தனது ரோல் குறித்துக் கேட்டுள்ளார். எல்லாவற்றையும் சொல்லிய பின்னர் சம்பளத்தைக்கேட்டுள்ளார் தயாரிப்பாளர். குண்டக்க மண்டக்க ஒரு ரேட்டை ப்ரியா கூற, கடுப்பாகிப் போன தயாரிப்பாளர், அப்புறம்பார்க்கலாம்னேன் என்று கூறி விட்டு திரும்பி விட்டாராம்.அவர் போன பின் யோசித்துப் பார்த்த ப்ரியா, தயாரிப்பாளருக்குப் போனைப் போட்டு, சொன்ன தொகையில் பாதியைக்குறைத்துக் கொள்வதாக கூறியுள்ளார். ஆனால் தயாரிப்பாளரோ, பார்க்கலாம், பார்க்கலாம் என்று பிடி கொடுக்காமல் கூறி கட்செய்துள்ளார்.இதை எப்படியோ தெரிந்து கொண்டு சைக்கிள் கேப்பில் புகுந்துள்ளா நயன்தாரா. சொன்ன ரேட்டுக்கு நடிக்கிறேன், கவர்ச்சிக்குகட்டுப்பாடே இருக்காது என்றும் உறுதி கூறி தயாரிப்பாளரிடம் அட்வான்ஸை வாங்கி விட்டாராம்.நரித்தனமாக இடையில் புகுந்து காரியத்தைக் கெடுத்த நயன்தாரா மீது செம கடுப்பில் இருக்கிறார் ப்ரியா.
நயன்தாராவின் பேரைக் கேட்டாலே பிற கோலிவுட் நாயகிகள் சந்திரமுகி ஜோதிகா மாதிரி ஆவேசமாகி விடுகிறார்கள்.
ஐயாவில் அறிமுகமாகி அடுத்த படத்திலேயே சூப்பர் ஸ்டாருடன் சந்திமுரகியில் நடித்து, டாப் கியரில் பிக் அப் ஆகி வரும்நயன்தாராவின், கையில் இப்போது நிறைய படங்கள்.
கவர்ச்சி காட்டத் தயார், சம்பளம் பத்திப் பிரச்சினை இல்லை, முக்கிய ரோலாக மட்டும் இருக்க வேண்டும் என்றப்ரீ-கண்டிஷன்களுடன் நயன்தாரா தரப்பு இயக்குனர்களையும், தயாரிப்பாளர்களையும் படு வேகத்தில் அணுகி வருகிறது.
நயனின் மேனேஜருக்கு முக்கிய வேலையே வாய்ப்பு வேட்டை தான். அவருக்கு புத்தம் புதிய லேட்டஸ்ட் காரை வாங்கித்தந்துவிட்ட நயனதாரா, கோடம்பாக்கத்தில் ஒரு தயாரிப்பாளர் விடாமல் பார்க்கச் சொல்லியிருக்கிறார்.
கிரவுண்ட் வொர்க்கை மேனேஜர் பார்க்க, அடுத்த கட்டமாக தானே பிக்சரில் வருகிறார் நயனதாரா. ஒரு போன்.. ஒரு கொஞ்சல்,அப்படியே நாம் 3வது பாராவில் சொன்ன வார்த்தைகளை எடுத்து வைக்கிறார். தேவைப்பாட்டால் ஒரு நேரடி சந்திப்பும்நடக்கிறது.
இப்படியாக அசுர வேகத்தில் டீல்களை முடித்து இளம் நடிகர்கள் முதல் தாத்தாக்கள் வரை அனைத்துத் தரப்பையும் கையில்போட்டு வருகிறார்.
இதன்மூலம் ஏற்கனவே சில நாயகிகளுக்குப் போக இருந்த படங்களும் நயன்தாரா பக்கம் போய்விட்டன. தனது திறமையானஅணுகுமுறையால் பிறரது வாய்ப்புக்களை அமுக்கி வரும் நயனதாரா மீது கோலிவுட் அழகிய ராட்சசிகள் கோபப்படாமல் இருக்கமுடியுமா?
மேலும் தான் நடிக்கும் படங்களில் யாராவது இன்னொரு ஹீரோயினும் இருந்தால் அவரது ரோலை அப்படியேகமுக்கமாக்கிவிடும் வேலைகளையும் ஆரம்பித்துவிட்டார் இந்த கேரளத்து சேச்சி.
இவரது இந்த வேலையால் நொந்து போயிருக்கிறார் இன்னொரு கேரளத்து பட்சியான ஆசின். கஜினி படத்தில் நாயகியாகப்போடப்பட்டவர் ஆசின் தான். இப்போது அசினின் ரோல் நயனதாராவுக்கும் ஆசினுக்கு நயனதாரா செய்ய இருந்த சாதாரணரோலும் மாற்றித் தரப்பட்டுவிட்டது.
நயனுக்கு இயக்குனர் அதிக முக்கியத்துவம் தருவதாக நினைக்கும் ஆசின், படத்திலிருந்தே கழன்று விடலாமா என்று கூடயோசித்து வருவதாக சொல்கிறார்கள்.
ஆசினோடு இப்போது ப்ரியா மணியின் கடுப்பையும் சம்பாதித்திருக்கிறார் நயன்தாரா. ப்ரியாமணியும் பாலக்காட்டைச் சேர்ந்தகேரளத்து சிட்டு தான்.
தமிழில் பட வாய்ப்புகள் சிக்காமல், மலையாளத்தில் அப்படி இப்படி ரோல்களிலும் நடிக்கத் துணிந்து விட்ட ப்ரியா மணியைத்தேடிப் போயிருக்கிறார் தமிழ்ப் படத் தயாரிப்பாளர் ஒருவர்.
வந்தவரை வரவேற்ற ப்ரியா, தனது ரோல் குறித்துக் கேட்டுள்ளார். எல்லாவற்றையும் சொல்லிய பின்னர் சம்பளத்தைக்கேட்டுள்ளார் தயாரிப்பாளர். குண்டக்க மண்டக்க ஒரு ரேட்டை ப்ரியா கூற, கடுப்பாகிப் போன தயாரிப்பாளர், அப்புறம்பார்க்கலாம்னேன் என்று கூறி விட்டு திரும்பி விட்டாராம்.
அவர் போன பின் யோசித்துப் பார்த்த ப்ரியா, தயாரிப்பாளருக்குப் போனைப் போட்டு, சொன்ன தொகையில் பாதியைக்குறைத்துக் கொள்வதாக கூறியுள்ளார். ஆனால் தயாரிப்பாளரோ, பார்க்கலாம், பார்க்கலாம் என்று பிடி கொடுக்காமல் கூறி கட்செய்துள்ளார்.
இதை எப்படியோ தெரிந்து கொண்டு சைக்கிள் கேப்பில் புகுந்துள்ளா நயன்தாரா. சொன்ன ரேட்டுக்கு நடிக்கிறேன், கவர்ச்சிக்குகட்டுப்பாடே இருக்காது என்றும் உறுதி கூறி தயாரிப்பாளரிடம் அட்வான்ஸை வாங்கி விட்டாராம்.
நரித்தனமாக இடையில் புகுந்து காரியத்தைக் கெடுத்த நயன்தாரா மீது செம கடுப்பில் இருக்கிறார் ப்ரியா.