’பலி’யைப் பார்த்து கோடு போட்டுக் கொள்ளும் டைகர்... தயாரிப்பாளர் கவலை!
சென்னை: சமீபத்தில் வெளியாகி வசூலில் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் ‘பலி' படத்தைத் தூக்கிச் சாப்பிடுவது போல் தனது டைகர் படம் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறாராம் அதன் ஹீரோ.
ஏற்கனவே, இந்தப் படத்திற்கான கிராபிக்ஸ் காட்சிகள் வெளிநாட்டில் தான் தயாரிக்கப் பட்டது. ஆனால், அவற்றில் சில காட்சிகள் திருப்தியாக இல்லை என்று அவர் சொல்லி விட்டாராம்.
இதைவிட அந்த பலி படத்தின் காட்சிகள் சூப்பராக இருந்தது. எனவே, அதைவிட இன்னும் சூப்பராக இந்தக் காட்சியை மெருகேற்றுங்கள் என சில காட்சிகளைக் கூறி விட்டாராம். இதனால், மீண்டும் அக்காட்சிகளை வெளிநாட்டிற்கு அனுப்பி, மாற்றுகிறார்களாம்.
முதல் வரலாற்றுப் படம் என்பதாலும், பலி படத்தோடு தன் படத்தை மக்கள் ஒப்பிட்டு விடக் கூடாது என்பதாலும் தான் நடிகர் இந்தக் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்கிறாராம்.
ஆனால், இவ்வாறு மீண்டும் சில காட்சிகளை வெளிநாட்டிற்கு அனுப்பி கிராபிக்ஸ் செய்வதால் தயாரிப்புச் செலவு இன்னும் சில கோடிகள் அதிகரித்துள்ளதாம். இதனால், அப்படத்தின் தயாரிப்பாளர் ஹேப்பி இல்லையாம் அண்ணாச்சி!


Click it and Unblock the Notifications











