இனிமே ஸோலோ காமெடிதான்... முடிவெடுத்த வைகைப் புயல்!
வைகைப் புயல் நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த வாரம் வெளியான சண்டை படத்தில் காமெடியனாக ரீ எண்ட்ரி ஆனார். படத்தில் இன்னொரு காமெடியனும் இருந்தார். முதல் பாதி அவருக்கும் இரண்டாம் பாதி புயலுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது.
முதல் பாதியில் யார் இருந்தா என்ன? இரண்டாம் பாதிதானே ரசிகர்கள் மனதில் நிற்கும் என நினைத்த புயலுக்கு ரிசல்ட் வேறு விதமாக வந்ததில் அப்செட்டாம். முதல் பாதி அளவுக்கு இரண்டாம் பாதியின் புயல் காட்சிகள் சிரிப்பு வரவில்லை. எனவே டீமை புதிதாக அமைத்து விட்டு கதை சொல்ல வரும் இயக்குநர்களிடம் ஸோலோ காமெடிதான்... முழு கதையையும் சொன்னாத்தான் நடிப்பேன் என்று கண்டிஷன் போடுகிறாராம்.

ஆமா... அடி வாங்குற காமெடி அலுத்து போச்சு அண்ணே... ரூட்டை மாத்துங்க!


Click it and Unblock the Notifications











