Don't Miss!
- News நாங்க ஆகம விதி நிபுணர்கள் அல்ல.. பிடிஆர் தாயிடம் செங்கோல் தர எதிர்க்கும் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
- Finance பெங்களூர் தண்ணீர் பஞ்சத்தில் இப்படியொரு பிரச்சனையா..? அதிர்ச்சியான விஷயம் தான்..!
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Sports மும்பை இந்தியன்சின் ஏமாற்று வேலைக்கு இனி ஆப்பு.. புதிய நடைமுறையை கொண்டு வந்த ஐபிஎல் நிர்வாகம்
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நக்மாவின் ரகஸ்யா டென்சன்
ரகஸ்யாவை குத்தாட்ட நாயகிகள்தான் கடும் போட்டியாக நினைக்கிறார்கள். ஆனால் ஒரு ஹீரோயின் இப்போதுரகஸ்யாவைப் பார்த்து டென்ஷன் ஆக ஆரம்பித்திருக்கிறாராம்.
மும்பையிலிருந்து சிரிச்சு சிரிச்சு வந்த சீனா தானா ரகஸ்யா, தமிழ் சினிமாவின் குத்தாட்டப் பாடல்களுக்கு புதுகெட்டப் கொடுத்தவர். அவரது இடுப்பசைவும், ஒடிப்பும், நெளிப்பும், சுளிப்பும் ரசிகர்களின் மனதில் கிளுகிளுப்புசுனாமியையே ஏற்படுத்தி விட்டது.இப்போது அதிக படங்களில் ரகஸ்யாவைப் பார்க்க முடியவில்லை என்றாலும் கூட ரகஸ்யாவின் நினைவிலேயேஇருக்கும் ரசிகர்கள் நிறைய. தமிழில் ஆட்டத்தைக் குறைத்துக் கொண்ட ரகஸ்யா இப்போது என்ன செய்கிறார்தெரியுமா?
போஜ்புரி படங்களில் அம்மணிதான் பிசியான நாயகியாக இருக்கிறாராம். கை நிறையப் படங்களுடன் போஜ்புரிரசிகர்களை கதி கலங்க வைத்துக் கொண்டிருக்கிறாராம் ரகஸ்யா.
அங்கேயும் குத்தாட்டமா என நினைக்காதீர்கள். போஜ்புரி படங்களில் ரகஸ்யா சிங்கிள் ஹீரோயினாக பின்னிஎடுத்து வருகிறார். போஜ்புரி படங்களில் இப்போதைக்கு முன்னணி நிாயகியாக இருப்பவர் ஜோவின் அக்காநக்மாதான்.
ஆனால் அவருக்கு கடும் போட்டியாக உருவெடுத்திருக்கிறாராம் ரகஸ்யா.
நக்மாவுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளையெல்லாம் கபால் கபால் என பாய்ந்து பாய்ந்த புடுங்கி நடிக்கஆரம்பித்துள்ளாராம் ரகஸ்யா. நக்மாவை விட படு சிறப்பாக ஒத்துழைப்பதாலும், போனஸாக குத்தாட்டத்தையும்சேர்த்துக் கொடுப்பதாலும் நக்மாவை விட்டு விட்டு ரகஸ்யாவை நோக்கி போஜ்புரி தயாரிப்பாளர்கள் சாயத்தொடங்கியுள்ளார்களாம்.
தமிழில் ஒரு பாட்டுக்கு ஆட அதிகபட்சம் 10 லட்சம் வரை வாங்கி வந்தார் ரகஸ்யா. ஆனால் போஜ்புரிபடங்களில் நடிக்க வெறும் 5 லட்சம்தான் தருகிறார்களாம். இருந்தாலும் நிறையப் படங்களில் நடிப்பதால் படுசெல்வாக்காகத்தான் இருக்கிறாராம் ரகஸ்யா.
ரகஸ்யாவின் எழுச்சியால் கடுப்பாகியுள்ள நக்மா, ரகஸ்யாவை எப்படி டேக்கிள் செய்வது என்பது தெரியாமல்விழி பிதுங்கிப் போயுள்ளாராம்.