ரம்யா வாழ்க்கையில் புயல்! ரம்யா கிருஷ்ணனின் குடும்ப வாழ்க்கையில் புயல் வீச ஆரம்பித்துள்ளது. சீக்கிரமேஅவரும், இயக்குனர்-கணவர் கிருஷ்ணவம்சியும் பிரிந்து விடுவதற்கான வாய்ப்புகள்இருப்பதாக டோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது. கிட்டத்தட்ட 20 வருடங்களாக நடித்துக் கொண்டிருப்பவர் ரம்யா கிருஷ்ணன்.நடிகைகள் பொதுவாக சில வருடங்கள் மட்டுமே புகழ் உச்சியில இருப்பார்கள்.அப்புறம் படிப்படியாக ஓய்ந்து போய் விடுவார்கள்.ஆனால் ரம்யா கிருஷ்ணனின் கதையே வேறு. ஆரம்பத்தில் அவரது மார்க்கெட்தமிழில் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. இருந்தாலும் தனது முயற்சியைவிடாத ரம்யா, கிடைத்த ரோல்களை ஏற்று நடித்து வந்தார். அப்படியே தெலுங்குக்குத்தாவினார்.தமிழ்தான் அவரை கைவிட்டதே தவிர தெலுங்கில் அவருக்கு பெரும் வரவேற்புகிடைத்தது. அங்கு முன்னணி நாயகியானார்.அங்கு கிடைத்த பெயர் அவருக்கு தமிழில் ரஜினியுடன் படையப்பாவில் நடிக்க வழிவகுத்தது. படையப்பா, ரஜினிக்கு மட்டுமல்ல, ரம்யா கிருஷ்ணனாலும் கூட மறக்கமுடியாத ஒரு முக்கியப் படமாக அமைந்து விட்டது.படையப்பாவுக்குப் பின்னர் ரம்யா தமிழில் மீண்டும் ஒரு ரவுண்டுக்குக் கிளம்பினார்.கை நிறையப் படங்களுடன், இன்றைய இளம் நடிகைகளை தூக்கிச் சாப்பிடும்வகையில் அவரது ஆட்டம், பாட்டம், படு அமர்க்களமாக இருந்தது.தொடர்ந்து தெலுங்கு, தமிழ், கன்னடம் என படு பிசியாக இருந்து வந்த ரம்யா,அவராகவே முன்வந்து படங்களைக் குறைத்துக் கொளள ஆரம்பித்தார்.தெலுங்கில் முன்னணி இயக்குனரான கிருஷ்ண வம்சிக்கும் அவருக்கும் காதல்மலர்ந்தது. அது கல்யாணத்திலும் முடிந்தது. ஒரு பெண் குழந்தைக்கும் தாயானார்ரம்யா.சினிமாவை பெருமளவு குறைத்துவிட்டு குழந்தையையும், கணவரையும் பார்த்துக்கொள்ள ஆரம்பித்தார் ரம்யா. ஆனால், இப்போது ரம்யா-வம்சி வாழ்க்கையில் புயல்வீசத் தொடங்கியுள்ளதாம்.இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு குழந்தையுடன் சென்னைக்கேவந்து விட்டார் ரம்யா.சன் டிவிக்காக ராதிகாவின் ராடன் நிறுவனம் தயாரித்து வழங்கும் தங்க வேட்டைநிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் இபபோது தனது கவனம் முழுவதையும்செலுத்தி வருகிறார் ரம்யா.முதலில்தமிழில் மட்டுமே இந்த நிகழ்ச்சியை வழங்கி வந்த ரம்யா, தெலுங்கிலும்இப்போது தொகுத்து வழங்குகிறார். முன்பு தெலுங்கை ராதிகாவே கையாண்டுவந்தார்.கிருஷ்ண வம்சிக்கும், அவருக்கும் என்ன பிரச்சினை என்று வெளிப்படையாகஇன்னும் தெரியவில்லை.இருந்தாலும் பிரச்சினை முற்றிக்கொண்டே போவதாகவும், விரைவிலேயே இருவரும்விவகாரத்து முடிவை எடுக்கக் கூடும் எனவும் இருவருக்கும் நெருங்கிய டோலிவுட்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.திருமணத்திற்கு முன்பு இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாருடன் இணைத்துகிசுகிசுக்கபபட்டார் ரம்யா. இதன் காரணமாக ரவிக்குமாருக்கும், அவரது மனைவிகற்பகத்திறகும் இடையே பிரச்சினை உருவானது.தன்னை ரவிக்குமார் கல்யாணம் செய்தே தீர வேண்டும் என்று ரம்யா ஒற்றைக காலில்நின்றதாக செய்திகள வந்தது நினைவிருக்கலாம்.இப்போது ரம்யாவின வாழக்கையில் இன்னொரு புயல் வீசியுள்ளது.

By Staff

ரம்யா கிருஷ்ணனின் குடும்ப வாழ்க்கையில் புயல் வீச ஆரம்பித்துள்ளது. சீக்கிரமேஅவரும், இயக்குனர்-கணவர் கிருஷ்ணவம்சியும் பிரிந்து விடுவதற்கான வாய்ப்புகள்இருப்பதாக டோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.

கிட்டத்தட்ட 20 வருடங்களாக நடித்துக் கொண்டிருப்பவர் ரம்யா கிருஷ்ணன்.நடிகைகள் பொதுவாக சில வருடங்கள் மட்டுமே புகழ் உச்சியில இருப்பார்கள்.அப்புறம் படிப்படியாக ஓய்ந்து போய் விடுவார்கள்.

ஆனால் ரம்யா கிருஷ்ணனின் கதையே வேறு. ஆரம்பத்தில் அவரது மார்க்கெட்தமிழில் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. இருந்தாலும் தனது முயற்சியைவிடாத ரம்யா, கிடைத்த ரோல்களை ஏற்று நடித்து வந்தார். அப்படியே தெலுங்குக்குத்தாவினார்.

தமிழ்தான் அவரை கைவிட்டதே தவிர தெலுங்கில் அவருக்கு பெரும் வரவேற்புகிடைத்தது. அங்கு முன்னணி நாயகியானார்.

அங்கு கிடைத்த பெயர் அவருக்கு தமிழில் ரஜினியுடன் படையப்பாவில் நடிக்க வழிவகுத்தது. படையப்பா, ரஜினிக்கு மட்டுமல்ல, ரம்யா கிருஷ்ணனாலும் கூட மறக்கமுடியாத ஒரு முக்கியப் படமாக அமைந்து விட்டது.

படையப்பாவுக்குப் பின்னர் ரம்யா தமிழில் மீண்டும் ஒரு ரவுண்டுக்குக் கிளம்பினார்.கை நிறையப் படங்களுடன், இன்றைய இளம் நடிகைகளை தூக்கிச் சாப்பிடும்வகையில் அவரது ஆட்டம், பாட்டம், படு அமர்க்களமாக இருந்தது.

தொடர்ந்து தெலுங்கு, தமிழ், கன்னடம் என படு பிசியாக இருந்து வந்த ரம்யா,அவராகவே முன்வந்து படங்களைக் குறைத்துக் கொளள ஆரம்பித்தார்.

தெலுங்கில் முன்னணி இயக்குனரான கிருஷ்ண வம்சிக்கும் அவருக்கும் காதல்மலர்ந்தது. அது கல்யாணத்திலும் முடிந்தது. ஒரு பெண் குழந்தைக்கும் தாயானார்ரம்யா.

சினிமாவை பெருமளவு குறைத்துவிட்டு குழந்தையையும், கணவரையும் பார்த்துக்கொள்ள ஆரம்பித்தார் ரம்யா. ஆனால், இப்போது ரம்யா-வம்சி வாழ்க்கையில் புயல்வீசத் தொடங்கியுள்ளதாம்.

இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு குழந்தையுடன் சென்னைக்கேவந்து விட்டார் ரம்யா.

சன் டிவிக்காக ராதிகாவின் ராடன் நிறுவனம் தயாரித்து வழங்கும் தங்க வேட்டைநிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் இபபோது தனது கவனம் முழுவதையும்செலுத்தி வருகிறார் ரம்யா.

முதலில்தமிழில் மட்டுமே இந்த நிகழ்ச்சியை வழங்கி வந்த ரம்யா, தெலுங்கிலும்இப்போது தொகுத்து வழங்குகிறார். முன்பு தெலுங்கை ராதிகாவே கையாண்டுவந்தார்.

கிருஷ்ண வம்சிக்கும், அவருக்கும் என்ன பிரச்சினை என்று வெளிப்படையாகஇன்னும் தெரியவில்லை.

இருந்தாலும் பிரச்சினை முற்றிக்கொண்டே போவதாகவும், விரைவிலேயே இருவரும்விவகாரத்து முடிவை எடுக்கக் கூடும் எனவும் இருவருக்கும் நெருங்கிய டோலிவுட்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திருமணத்திற்கு முன்பு இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாருடன் இணைத்துகிசுகிசுக்கபபட்டார் ரம்யா. இதன் காரணமாக ரவிக்குமாருக்கும், அவரது மனைவிகற்பகத்திறகும் இடையே பிரச்சினை உருவானது.

தன்னை ரவிக்குமார் கல்யாணம் செய்தே தீர வேண்டும் என்று ரம்யா ஒற்றைக காலில்நின்றதாக செய்திகள வந்தது நினைவிருக்கலாம்.

இப்போது ரம்யாவின வாழக்கையில் இன்னொரு புயல் வீசியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X