Don't Miss!
- News டார்க்கெட் திமுக.. தமிழக பாஜக தொண்டர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி! ‛மாஸ்டர் பிளான்’
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ரஞ்சிதா அமெரிக்காவுக்கு ஓட்டம்?
நித்யானந்தன்- ரஞ்சிதா செக்ஸ் வீடியோ வெளியானதும் இருவருமே தலைமறைவாகியுள்ளனர். எங்கோ பதுங்கியிருந்தபடி நித்யானந்தா மட்டும் அவ்வப்போது சிடி அனுப்புவதும் தனக்கு வேண்டியவர்களை வைத்து பேட்டி கொடுப்பதுமாக உள்ளார்.
ரஞ்சிதாவோ செல்போனில் பேட்டி கொடுத்து வந்தார்.
இந் நிலையில், நித்யானந்தா மீது ஏராளமான வழக்குகள் தமிழகத்திலும் கர்நாடகத்திலும் பதிவு செய்யப்பட்டன.
நிதி மோசடி, நம்பிக்கை மோசடி என பல வழக்குகள் கர்நாடகத்தில் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் ரஞ்சிதாவும் ஒரு கூட்டாளியாக மற்றும் சாட்சியாக விசாரிக்கப்படுவார் என அறிவித்த போலீசார், அவரைத் தேடி வருவதாகவும் கூறினர்.
மேலும், மர்ம நபர்கள் சிலர் ரஞ்சிதாவின் சென்னை வீட்டை கண்காணிப்பதாகவும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பரபரப்பைக் கிளப்பிவிட்டுள்ளது ரஞ்சிதா தரப்பு. இந்தக் காரணத்தை முன்வைத்தே போலீசாரின் பிடியில் சிக்காமல் அவர் அமெரிக்காவுக்கு தப்பி ஓடி விட்டதாகக் கூறப்படுகிறது.
நித்யானந்தன் வீடியோ வெளியானதுமே, ரஞ்சிதா- நித்யானந்தன் பாஸ்போர்ட்டை முடக்காமல் விட்டுவிட்டது போலீஸ். இதில் உயர்மட்டத்தில் உள்ள சிலரது அழுத்தங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றவாம்.
அதன் விளைவுதான் இப்போது குறைந்தபட்ச விசாரணைக்கு கூட வராமல் தண்ணி காட்டுகிறார்கள் இருவரும் என்கிறார்கள். மேலும் சாமியார் விவகாரத்தில் போலீஸ் எந்த திசையில் போவது என்றே தெரியாமல் குழம்புவதாகவும் கூறப்படுகிறது.