Don't Miss!
- Technology தட்டித்தூக்கும் விலை.. AMOLED டிஸ்பிளே.. 5ATM ரெசிஸ்டன்ஸ்.. 14 நாட்கள் பேக்கப்.. எந்த மாடல்?
- News அதிமுக வேண்டாம்? பாமக முடிவுக்கு என்ன காரணம்? மொத்த டேட்டா இதோ!
- Finance தேர்தல் பத்திரம்: தனிநபர்கள் நன்கொடை செய்த ரூ.358.91 கோடி.. முதல் இடத்தில் யார் தெரியுமா..?
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Sports இவ்ளோ திறமையா? ரோஹித்தை வியக்க வைத்த இளம் வீரர்.. இதை மட்டும் செய்தால் டி20 அணியிலும் இடம் உறுதி
- Automobiles 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
'அந்த' நடிகருக்கு திருமணம் தள்ளிக் கொண்டே போவது ஏன் தெரியுமா?
சென்னை: நடிகர் ஒருவருக்கு திருமணம் தள்ளிக் கொண்டே போவதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.
நல்ல திறமையான நடிகர் அவர். பெரிய ஆளாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏதேதோ நடந்துவிட்டது. நடிகரின் வாழ்வில் காதல் வருவதும், போவதுமாக இருந்ததே தவிர எதுவும் நிலைக்கவில்லை. ச்ச்சீ இந்த காதல் பழம் புளிக்கும் என்று எதுவுமே வேண்டாம் என்று ஒதுங்கி இருந்தார் நடிகர். ஆனால் அவரை அப்படியே விட்டுவிட்ட பெற்றோருக்கு மனம் இல்லை.
நடிகருக்கு வயதாகிக் கொண்டே போவதால் விரைவில் திருமணம் செய்து வைக்க பெற்றோர் பெண் பார்க்கிறார்கள். சில இடங்களில் நடிகரை பற்றி தெரிந்து பெண் கொடுக்க மாட்டேன் என்கிறார்களாம். இதே பிரச்சனை ஏற்பட்ட மற்றொரு நடிகருக்கு தற்போது திருமணமாகிவிட்டது. ஆனால் நடிகரின் விஷயத்தில் மேலும் சில பிரச்சனை உள்ளது.
அதாவது பெண் கொடுக்க சம்மதித்தால் நடிகர் தரப்பில் இருந்து இரண்டு பிரச்சனை ஏற்படுகிறதாம். பெண்ணை நடிகருக்கு பிடித்தால் குடும்பத்தாருக்கு பிடிப்பது இல்லையாம். குடும்பத்தாருக்கு பிடிக்கும் பெண்ணை நடிகருக்கு பிடிப்பது இல்லையாம்.
Bigg Boss 3: சுத்தி சுத்தி ஒரு வழியாக எவிக்ஷனுக்கு வந்த கமல்
குடும்பத்தாருக்கும், நடிகருக்கும் எந்த பெண்ணை பிடிக்கிறதோ அவரே மணமகளாம். இதெல்லாம் எப்பொழுது நடந்து, எங்க அண்ணனுக்கு எப்போ திருமணம் நடப்பது என்று ரசிகர்கள் தான் பாவம் கவலையில் உள்ளனர்.
நடிகருக்கு திருமணம் கைகூடாமல் இருப்பது அவரின் தந்தைக்கு பெரிய வருத்தம். மகனை நினைத்தால் மனிதர் கண் கலங்கிவிடுகிறார். கடவுள் தான் தன் மகனுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று இருக்கிறார் நடிகரின் அப்பா.