ஆனந்த நடிகையை அனுபவித்து கழற்றிவிட்ட நடிகர்?.. இந்த பூனையும் பால் குடிக்குமா?..வேற மாதிரி இருக்கே..!

By Staff

சென்னை: ஆனந்தமாக இருந்த நடிகையை நடிகர் அனுபவித்து கழற்றிவிட்டதால் அந்த நடிகை விரக்தியின் உச்சத்துக்கே சென்றுவிட்டாராம்

பக்கத்து மாநிலத்தை பூர்வீகமாக கொண்டாலும் அந்த நடிகர் தமிழ் மக்களுக்கு ரொம்பவே ப்ரியமானவர். அவரது உடலும், முகமும் அச்சு அசல் தமிழ்நாட்டுக்காரர் போலவே இருக்கும். அதன் காரணமாக அவரை தமிழ் ரசிகர்கள் தங்களது ஃபேவரைட்டாக ஏற்றுக்கொண்டனர். சிறப்பாக நடிப்பார் என்றும் அவர் பெயரை எடுத்தார். பல படங்களில் நடித்த அவர் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார்.

 Rumours in Kollywood are now that the actress has been wooed by the actor

மகன் அறிமுகம்: அந்த நடிகர் உயிருடன் இருக்கும்போதே மகனும் திரைத்துறைக்குள் நுழைந்துவிட்டார். இப்போது பீக்கில் இருக்கும் நடிகைதான் நடிகரின் மகனுக்கு முதல் ஜோடி. படம் வெளியாகி சுமாரான வரவேற்பைத்தான் பெற்றது. அதேசமயம் பாடல்கள் அனைத்தும் இளைஞனின் இசையால் பட்டையை கிளப்பின. எப்படியோ மகன் மக்களிடம் ரீச்சாகிவிட்டார் என்ற நிம்மதியில் இருந்த நடிகர் படம் ரிலீஸாகி அடுத்த மாதமே உயிரிழந்தார்.

பரதேசம் சென்ற நடிகர்: முதல் படத்தில் நடிகரின் மகன் என்ற அடையாளத்தோடு வலம் வந்தாலும் நடிக்க தெரிந்த பையனா இருக்காரு ப்பா என்ற பெயரை பெற்றார் அந்த வாரிசு நடிகர். அதனைத் தொடர்ந்து கற்பனையான படத்தில் நடித்து சூடு வாங்கிக்கொண்டார். நடிக்க தெரிந்திருக்கு ஆனால் நல்ல இயக்குநர் சிக்க மாட்டேங்கிறாரே என்ற ஏக்கத்தில் இருந்தபோது இந்த நடிகரின் தந்தைக்கு ரொம்பவே கடமைப்பட்ட பெரிய இயக்குநர் இவரை வைத்து பஞ்சம் பிழைக்க பரதேசம் செல்லும்படி படம் எடுத்தார். படம் வசூல் ரீதியாக நன்றாக போகாவிட்டாலும் சிறப்பான பெயரை பெற்றுக்கொடுத்தது.

குதிரை: அந்தப் படத்துக்கு பிறகு நடிகருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. அப்படி வந்த ஒரு படம்தான் குதிரை படம். அந்த குதிரை படத்தில் ஆனந்தமான நடிகை இவருக்கு ஜோடி போட்டார். இருவருக்கும் கெமிஸ்ட்ரி பற்றிக்கொண்டுவிட்டதாம். இதனால் இயக்குநர் பேக்கப் சொன்ன பிறகு இவர்கள் இருவரும் ஊர் ஊராக, ரூம் ரூமாக சுற்றினார்களாம்.

அவுட்டிங் டூ லிவிங்: இப்படி சுற்றுவது சரிபட்டு வராது என்று முடிவு எடுத்த இரண்டு பேருமே ஒரு ப்ளாட்டை எடுத்து அதில் லிவிங் டூ கெதராக இருந்தார்களாம். ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பதற்கேற்ப இரண்டு பேரும் ஆரம்பத்தில் பல விஷயங்களில் ஒன்றாக இணைந்தே இருந்திருக்கிறார்கள். விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே லீக் ஆக ஆரம்பித்தது. நடிகர் இந்த இண்டஸ்டரிக்கு அவரது குடும்பத்திலிருந்து இரண்டாவது தலைமுறை. நடிகையோ இண்டஸ்ட்ரிக்கு முதல் தலைமுறை. சூதுவாது தெரியாத நடிகை நடிகரே கண் கண்டது எல்லாம் என்று நம்பி அனைத்தையும் கொடுத்திருக்கிறார்.

உஷாரான நடிகர்; விரக்தியான நடிகை: விஷயம் வெளியே லீக்காக ஆரம்பித்ததை உணர்ந்துகொண்ட நடிகர்; நடிகையிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்திருக்கிறார். ஆனால் ஆனந்தமான நடிகையோ அனைத்தையும் கொடுத்துவிட்டோம். எனவே நடிகரை விடக்கூடாது என்பதில் தீவிரம் காட்டி பல வழிகளில்; பல நேரங்களில் தாஜா செய்திருக்கிறார். இருந்தாலும் பிடிக்கொடுக்காத நடிகர் வேண்டும்வரை அனுபவித்துவிட்டு தனக்கு குடும்பமும், குடும்பத்தின் பெயரும்தான் முக்கியம் என சொல்லி பை சொல்லியிருக்கிறார்.

இதனால்தான் அந்த ஆனந்தமான நடிகை ஆனந்தத்தை இழந்து படங்களில் பெரிதாக கமிட்டாகாமல் அடைந்து கிடந்தாராம். ஒருவழியாக இப்போது சிங்கம் படத்தில் நடித்திருக்கிறார். இனியாவது தனது கரியரில் கவனத்தை செலுத்தி ஆனந்தத்தை அந்த நடிகை தக்க வைப்பாரா என்பதுதான் கோலிவுட்டின் இப்போதைய ஹாட் டாபிக்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X