எப்ப பார்த்தாலும் நான் தான் கிடைச்சேனா?: குமுறும் நடிகை
சென்னை: சிங்கத்தின் தற்போதைய நாயகி தன்னை பற்றி வரும் வதந்திகளால் கடுப்பாகியுள்ளாராம்.
லிங்கமான இயக்குனரின் படத்தில் சிங்கத்திற்கு ஜோடியாக டோலிவுட்டின் முன்னணி நடிகை நடித்து வருகிறார். அம்மணி பல படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் களைப்பு ஏற்பட்டதாலும், சக்திவாய்ந்த விளக்கு வெளிச்சத்தில் நின்று படப்பிடிப்பில் வேலை பார்த்ததாலும் அவரது உடல் நிலை சற்று பாதிக்கப்பட்டு 2 நாட்கள் ஓய்வெடுத்துள்ளார். இந்நிலையில் அவருக்கு தோல் வியாதி தீவிரமாகிவிட்டது என்று செய்திகள் வந்தன. இதை பார்த்த நடிகை கடுப்பாகிவிட்டாராம்.
ஒன்று யாருடனாவது காதல் என்று வதந்தியை பரப்புகிறார்கள் இல்லை என்றால் தோல் வியாதி என்று கூறுகிறார்கள். ஒரு மனுஷிக்கு களைப்பு ஏற்பட்டு ஓய்வெடுக்கக் கூட கூடாதா என்று குமுறுகிறாராம்.
Comments


Click it and Unblock the Notifications