Don't Miss!
- News தோளை தொட்ட சு.வெங்கடேசன்.. டக்னு திரும்பிய டாக்டர் சரவணன்.. பூரித்த மதுரை.. சபாஷ், இது போதுமே நமக்கு
- Automobiles ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
காதல் வலையில் சதா அப்பா, அம்மா பார்க்கிற மாப்பிள்ளையைத் தான் கல்யாணம் பண்ணிக்குவேன் என்று எல்லோரையும் போல செல்லி வந்த சதாஇப்போது காதல் மயக்கத்தில் உள்ளாராம். ஆனால் யார் அந்தக் காதலன் என்பதைப் பற்றி அவர் மூச்சு விட மறுக்கிறார்.ஜெயத்தில் அடக்க ஒடுக்கமாக அறிமுகமான சதா, அந்நியனின் தாராளம் காட்டியிருக்கிறார். இதனால் அந்தப் படத்தைஅவரைவிட ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆரம்பத்தில் கவர்ச்சியாக நடிக்க மறுத்த சதா, ஷங்கர்கொடுத்த ஷாக் ட்ரீட்மென்ட்டைத் தொடர்ந்து போதும் என்ற அளவுக்கு கிளாமர் காட்டி அசத்தியுள்ளார்.இந்தப் படம் வெளிவரும் வரை வேறு புதிய படங்களை ஒப்புக் கொள்ள முதலில் மறுத்த வந்தவர் (சம்பளத்தை கூட்டுவதற்காக),தேஜா என்ற தெலுங்கு-தமிழ் இரு மொழிகளில் உருவாகும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.காரணம், இதில் நடிக்க சதாவுக்குத் தரப்பட்டுள்ள சம்பளம் தான். எவ்வளவு தெரியுமா? ரூ. 50 லட்சத்தைக் கேட்டு வாங்கியுள்ளார்சதா. முதலில் இவ்வளவு பெரிய தொகையை தர மறுத்த தயாரிப்பாளர் பிறகு தலையாட்டிவிட்டாராம். அந்நியன் வந்தால்இன்னும் ரேட் ஏறும் சதா மிரட்டியதே தயாரிப்பாளரின் சரண்டருக்கு காரணமாம்.தேஜாவுக்கு கதை, திரைக்கதை, டைரக்ஷன் ஆகிய பொறுப்புகளை ஏற்றிருப்பவர் கிருஷ்ண பிரஷாத். இவர் பிரபல தெலுங்குப்பட இயக்குனரும், நடிகை ரம்யா கிருஷ்ணனின் காதல் கணவருமான கிருஷ்ண வம்சியிடம் உதவி இயக்குனராக இருந்தவர்.இதில் சதாவுக்கு ஜோடியாக ஹூரோவாக நடிப்பது ஜெய் ஆகாஷ். ராமகிருஷ்ணா பட புகழ் வாணி, இதில் ஜெய் ஆகாஷின்தங்கையாக நடிக்கிறார்.இந்தப் படம் தவிர மாதவனுடன் பிரியசகி என்ற ஒரே ஒரு படம் தான் சதாவின் கைவசம் உள்ளது. வேறு படங்கள் எதுவும்புக்காகவில்லை. ஆனால் அதைப் பற்றியெல்லாம் சதா கவலைப்படுவதும் இல்லை.உப்புமா கம்பெனிகளில் இருந்து கொஞ்சமாய் அட்வான்ஸ் எடுத்துக் கொண்டு கால்ஷீட் கேட்டும், கதை சொல்கிறோம் என்றுசொல்லிக் கொண்டும் யாராவது வந்தால் அவர்களை ஏதாவது ஒரு காரணம் கூறி விரட்டி விடுகிறார்."சதா சர்வகாலமும் யாரையோ நினைத்து ஏங்குகிறார் சதா என்கின்றன கோடம்பாக்கம் குருவிகள். அவர் காதல் வலையில்சிக்கிவிட்டார் என்கின்றார்கள். ஆந்திர தேசத்துக் காதலனாம் அவர்.சதாவின் இந்த காதல் விவாகாரம் வீட்டிற்கும் தெரிந்து வில்லங்கமாகி விட்டதாம். காதலுக்கு வீட்டில் கடும் எதிர்ப்புகிளம்பியதால் தான் மந்திரித்து விட்டது மாதிரி திரிகிறார் என்கிறார்கள்.
அப்பா, அம்மா பார்க்கிற மாப்பிள்ளையைத் தான் கல்யாணம் பண்ணிக்குவேன் என்று எல்லோரையும் போல செல்லி வந்த சதாஇப்போது காதல் மயக்கத்தில் உள்ளாராம். ஆனால் யார் அந்தக் காதலன் என்பதைப் பற்றி அவர் மூச்சு விட மறுக்கிறார்.
ஜெயத்தில் அடக்க ஒடுக்கமாக அறிமுகமான சதா, அந்நியனின் தாராளம் காட்டியிருக்கிறார். இதனால் அந்தப் படத்தைஅவரைவிட ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆரம்பத்தில் கவர்ச்சியாக நடிக்க மறுத்த சதா, ஷங்கர்கொடுத்த ஷாக் ட்ரீட்மென்ட்டைத் தொடர்ந்து போதும் என்ற அளவுக்கு கிளாமர் காட்டி அசத்தியுள்ளார்.
இந்தப் படம் வெளிவரும் வரை வேறு புதிய படங்களை ஒப்புக் கொள்ள முதலில் மறுத்த வந்தவர் (சம்பளத்தை கூட்டுவதற்காக),தேஜா என்ற தெலுங்கு-தமிழ் இரு மொழிகளில் உருவாகும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
காரணம், இதில் நடிக்க சதாவுக்குத் தரப்பட்டுள்ள சம்பளம் தான். எவ்வளவு தெரியுமா? ரூ. 50 லட்சத்தைக் கேட்டு வாங்கியுள்ளார்சதா. முதலில் இவ்வளவு பெரிய தொகையை தர மறுத்த தயாரிப்பாளர் பிறகு தலையாட்டிவிட்டாராம். அந்நியன் வந்தால்இன்னும் ரேட் ஏறும் சதா மிரட்டியதே தயாரிப்பாளரின் சரண்டருக்கு காரணமாம்.
தேஜாவுக்கு கதை, திரைக்கதை, டைரக்ஷன் ஆகிய பொறுப்புகளை ஏற்றிருப்பவர் கிருஷ்ண பிரஷாத். இவர் பிரபல தெலுங்குப்பட இயக்குனரும், நடிகை ரம்யா கிருஷ்ணனின் காதல் கணவருமான கிருஷ்ண வம்சியிடம் உதவி இயக்குனராக இருந்தவர்.
இதில் சதாவுக்கு ஜோடியாக ஹூரோவாக நடிப்பது ஜெய் ஆகாஷ். ராமகிருஷ்ணா பட புகழ் வாணி, இதில் ஜெய் ஆகாஷின்தங்கையாக நடிக்கிறார்.
இந்தப் படம் தவிர மாதவனுடன் பிரியசகி என்ற ஒரே ஒரு படம் தான் சதாவின் கைவசம் உள்ளது. வேறு படங்கள் எதுவும்புக்காகவில்லை. ஆனால் அதைப் பற்றியெல்லாம் சதா கவலைப்படுவதும் இல்லை.
உப்புமா கம்பெனிகளில் இருந்து கொஞ்சமாய் அட்வான்ஸ் எடுத்துக் கொண்டு கால்ஷீட் கேட்டும், கதை சொல்கிறோம் என்றுசொல்லிக் கொண்டும் யாராவது வந்தால் அவர்களை ஏதாவது ஒரு காரணம் கூறி விரட்டி விடுகிறார்.
"சதா சர்வகாலமும் யாரையோ நினைத்து ஏங்குகிறார் சதா என்கின்றன கோடம்பாக்கம் குருவிகள். அவர் காதல் வலையில்சிக்கிவிட்டார் என்கின்றார்கள். ஆந்திர தேசத்துக் காதலனாம் அவர்.
சதாவின் இந்த காதல் விவாகாரம் வீட்டிற்கும் தெரிந்து வில்லங்கமாகி விட்டதாம். காதலுக்கு வீட்டில் கடும் எதிர்ப்புகிளம்பியதால் தான் மந்திரித்து விட்டது மாதிரி திரிகிறார் என்கிறார்கள்.