Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சங்கத் தலைவர் பேச்சை அவர் காதலியே மதிக்கவில்லையே, அப்போ மத்தவங்க...
Recommended Video
சென்னை: சங்கத் தலைவரின் பேச்சை அவர் காதலியே கேட்காதபோது மற்றவர்களை எப்படி கேட்க வைப்பார் என்ற பேச்சு கிளம்பியுள்ளது.
விருது விழாக்களில் திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்வது புதிது அல்ல. விருது விழாக்கள் வியாபார நோக்கத்துடன் நடத்தப்படுவதால் அதன் பலனை நடிகர், நடிகைகளும் அனுபவிக்க வேண்டும் என்று தென்னந்திய நடிகர் சங்க கூட்டத்தில் முடிவு செய்தனர்.
இது குறித்து அண்மையில் அண்டை மாநிலத்தில் நடந்த விருது விழா ஏற்பாட்டாளர்களிடம் கூற அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து அந்த விழாவை புறக்கணிக்குமாறு சங்கத் தலைவர் நடிகர், நடிகைகளை கேட்டுக் கொண்டார்.
நன்றி
தலைவரின் பேச்சை மதித்து சர்ச்சை நடிகை, விரல் வித்தை நடிகர், சேது நடிகர், தம்பி நடிகர் ஆகியோர் விருது விழாவில் கலந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு தலைவர் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.
நடிகர்கள்
சீனியர் ஆர்டிஸ்டுகளின் ஓய்வூதியத்திற்காக தான் இந்த புதிய ஏற்பாடு. சங்கத்தின் முடிவை மதித்து விருது விழாவை புறக்கணித்த கலைஞர்களுக்கு நன்றி என்று தலைவர் கூறியுள்ளார்.
விழா
சங்கத் தலைவரின் காதலி என்று கூறப்படும் வாரிசு நடிகை அந்த விருது விழாவில் கலந்து கொண்டார். விழாவுக்கு தான் அணிந்து சென்ற சேலை மிகவும் பிடித்திருந்ததாக சமூக வலைதளத்தில் புகைப்படத்துடன் தெரிவித்திருந்தார்.
மற்றவர்கள்
காதலியே சங்கத் தலைவரின் பேச்சை மதிக்காமல் விருது விழாவில் கலந்து கொண்டுள்ளார். அப்படி இருக்கும்போது மற்றவர்கள் எப்படி அவர் பேச்சை மதிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.