"கிசு கிசு" கார்னர்
தமிழக இளைஞர்களின் தூக்கத்தைக் கெடுத்து வரும் ஷெரீனுக்கும் இப்போதெல்லாம் தூக்கமே போய்விட்டது.
துள்ளுவதோ இளமையில் நடித்தாலும் நடித்தார், ஷெரீன் ஷெட்டிப் பைத்தியங்கள் நிறையவே உருவாகி விட்டார்கள். ரசிகர்கள் மட்டும்தான் இல்லைஎன்றாலும் சக நடிகர்களும் கூட அவரிடம் விடும்ஜொள்ளை அவரால் சமாளிக்க முடியவில்லை.
முதலில் இதையெல்லாம் பார்த்துப் பெருமைப்பட்டவர் இப்போது நிலைமை மிகவும் மோசமாகிவிட்டதால் ஓடி ஒளிகிறார்.
அடிக்கடி அவரது வீட்டுக்கு நடிகர்கள் போன் போட்டு கடலை போட ஆரம்பித்துள்ளார்களாம். இரவில் அந்த மாதிரி போன் கால்கள் மிகஅதிகமாகவே வர ஆரம்பித்துவிட்டனவாம்.
நடிகர்களைப் பகைத்துக் கொள்ள முடியாது என்பதால் தனது தூக்கத்தை அப்படியேயே விட்டுவிட்டு வந்து அவர்களுடன் பேசியே ஆக வேண்டிய நிலையில்இருக்கிறார் ஷெரீன்.
சும்மா கால் செய்தேன் என்று ஆரம்பித்து, வீட்டுக்கு வரச் சொல்வது, பார்டிகளுக்கு அழைப்பது, சேர்ந்து நடிக்க கால்ஷீட் தரச் சொல்வது, பாரின் டிரிப்போகலாமா என்ற ரீதியில் சீண்டல்கள் செய்வது என சக நடிகர்களின் லொள்ளை தாஙக முடியாமல் திணறி வருகிறார் ஷெரீன்.
இது தவிர வழக்கமான ரசிக மகா ஜனங்களின் போன்கள் வேறு. நான் உங்கள் ரசிகன், நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க, சிரிப்பு சூப்பர், ஒரு கண்ணு ஒதுங்கிஇருக்குறது ரொம்ப செக்ஸியா இருக்கு, உதடு அடடா என்ற ரீதியில் வர்ணித்து ஜொள்ளு விடுகிறார்களாம்.
சில சமயங்களில் காதுகளைப் பொத்திக் கொள்ளும் அளவுக்கு புகழாரங்கள் புல்லரிக்க வைக்கிறதாம். இதனால் வெறுப்பின் உச்சகட்டத்தில்இருக்கிறார் ஷெரீன்.
இதனால், தனது செக்ஸ் அப்பீல் இமேஜை உடைக்கும் வகையில் ஏதாவது ஒரு படத்தில் உடனடியாக நடித்தே ஆக வேண்டும் முடிவுக்கு வந்துள்ளார் ஷெரீன்.
ஷெரீன் குறித்து சக திரையுலகினரே இப்படி கீழ் மட்டத்துக்கு இறங்கி வந்து லொள்ளு பண்ணுவதற்கு காரணமே அவர் தான் என்கிறார்கள். தினம் ஒருபாய் பிரண்டுடன் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து அவர்களிடம் ஷெரீன் செய்யும் சில்மிஷங்களைப் பார்த்து நடிகர்களுக்கு ஷெரீன் மீது குண்டக்க மண்டக்க அன்பு பெருகிவிட்டதாம்.


Click it and Unblock the Notifications











