வளர்ந்து வரும் நேரத்தில் ஒரு தயாரிப்பாளரிடம் மாட்டி தவிக்கும் நடிகர்!
மங்காத்தா இயக்குநரால் அறிமுகப்படுத்தப்பட்டு அவர் படங்களில் ரெகுலராக தலைகாட்டி வந்தவர் அந்த தெலுங்கு குடும்பத்தில் இருந்து வந்திருக்கும் நடிகர்.
ஷிப் படத்தாலும் செல்போன் பேய் படத்தாலும் ஹீரோ ரேஞ்சுக்கு வந்தார். இரண்டு படங்களுமே ஓரளவுக்கு ஓடியதால் அடுத்தடுத்து படங்கள் வந்தன.

ஆனால் எதையும் ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து கவுரவ வேடங்களாகவே நடித்து வருகிறார். காரணம் விசாரித்தால் ஷிப் தயாரிப்பாளர்தான் காரணம் என்கிறார்கள். ஷிப் படத்தின் போது அடுத்தடுத்த படங்களுக்கு அட்வான்ஸ் கொடுத்து அக்ரிமெண்ட் போட்டுவிட்டார்களாம். அவற்றை ஆரம்பிக்காமல் இழுக்கிறார்களாம்.
இதனால்தான் அவசரப்பட்டு கையெழுத்து போட்டதை எண்ணி வீட்டிலேயே சும்மா உட்கார்ந்து புலம்பி வருகிறார்.


Click it and Unblock the Notifications











