இப்பதான் எனக்கே படம் ஓடுது, இந்நேரம் பார்த்து காட்சிகள் ரத்தா: கடுப்பில் ஹீரோ
சென்னை: அரசியல் சூழ்நிலையால் தனது புதிய படத்தின் காட்சிகள் ரத்தானதால் சிறுத்தை கடுப்பானாராம்.
சிறுத்தை நடிகருக்கு பல காலம் கழித்து தற்போது தான் ஒரு படம் ஹிட்டாகியுள்ளது. வெள்ளிக்கிழமை படம் ரிலீஸானது. படம் ரிலீஸான மறுநாளே அம்மா கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். இதை கண்டித்து ஆளுங்கட்சியினர் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என்று தொடர் போராட்டங்களில் குதித்துள்ளனர்.
இந்நிலையில் திரை உலகினர் அம்மாவுக்கு தங்களின் ஆதரவை தெரிவிக்கும் பொருட்டு உண்ணாவிரதம் இருந்ததுடன், அன்றைய தினம் மாநிலத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் 4 காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன.
தனக்கே இப்போது தான் ஒரு படம் நன்றாக ஓடுகிறது. இந்நிலையில் இப்படி அரசியல் சூழ்நிலையால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுவிட்டதே என்று சிறுத்தை கவலைப்பட்டாராம்.
இப்படி ரத்து செய்தால் படத்தின் வசூல் பாதிக்கப்படுமே என்று கவலையும் ஏற்பட்டதாம்.


Click it and Unblock the Notifications











