twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காதலில் ஷ்ரேயா? ஷ்ரேயா காதலில் சிக்கித் தவிப்பதாக கோலிவுட்டில் ரூமர் கிளம்பியுள்ளது. மழை மூலம் தமிழ் ரசிகர்களின் இதயங்களை குளிர வைத்த ஷ்ரேயாவின் காட்டில்இப்போது அடை மழை. சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சிவாஜியில் ஜோடி போட்டுள்ளஷ்ரேயா, அவரது மருமகன் தனுஷுடனும் டூயட் பாடிக் கொண்டிருககிறார்.சிவாஜி முடியும் வரை வேறு படங்களில் நடிக்கக் கூடாது என இயக்குநர் ஷங்கர் தடைபோட்டுள்ளதால் கமல் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கை நழுவிப் போனது. இதனால்வருத்தத்தில் உள்ளார் ஷ்ரேயா. இருந்தாலும் சிவாஜி முடிந்த பிறகு வந்து நடிச்சுக்கொடுங்க என சில தயாரிபபாளர்கள் ஷ்ரேயாவிடம் இப்போதே அட்வான்ஸ் புக்கிங்செய்து வைத்துள்ளனராம்.சிவாஜி பட ஷூட்டிங்க்குக்கிடையே, ஷ்ரேயா அடிக்கடி மும்பைக்கு ஓடிவிடுகிறாராம். அம்மணி காதல் வலையில் சிககியுள்ளதாகவும், காதலை பார்த்துபேசத்தான் ஓடி விடுகிறார் எனறும் கோலிவுட்டில் குசுகுசிக்கிறார்கள்.மெய்யாலுமா என்று ஷ்ரேயாவிடம் போய் கேட்டால், அடிக்க வருகிறார். இதெல்லாம்சுத்த பேத்தல் செய்திப்பா. எனக்கு அப்படி ஒரு காதலரே கிடையாது. உண்மையைச்சொல்லனும்னா பாய் பிரண்ட் கூட எனக்குக் கிடையாது. நான் ரொம்ப நல்ல புள்ளைஎன்று சத்தியம் செய்கிறார்.எப்படி ஒரே நேரத்தில் மாமனாருடனும், மருமகனுடனும் ஜோடி போட முடிகிறதுஎன்று ஆச்சரியப்பட்டுக் கேட்டால், அதில் விசேஷம் ஏதும் இல்லை. இரண்டுமே நல்லகதை, இருவருமே நல்ல நடிகர்கள். இரண்டிலுமே எனக்கு ஏற்ற கேரக்டர்கள்.அதனால் தான் நடிக்க முடிகிறது.இதைச் சொல்கிறீர்களே, அப்பா, மகன் நடிகர்களுடன் பல நடிகைகள் இங்கே ஒரேநேரத்தில் ஜோடியாக நடிததுள்ளார்களே, அது முடியும் போது இது முடியாதா என்ன? இரண்டு படங்களுமே எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும் எனநம்பிக்கையாக கூறுகிறார் ஷ்ரேயா.

    By Staff
    |

    ஷ்ரேயா காதலில் சிக்கித் தவிப்பதாக கோலிவுட்டில் ரூமர் கிளம்பியுள்ளது.

    மழை மூலம் தமிழ் ரசிகர்களின் இதயங்களை குளிர வைத்த ஷ்ரேயாவின் காட்டில்இப்போது அடை மழை. சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சிவாஜியில் ஜோடி போட்டுள்ளஷ்ரேயா, அவரது மருமகன் தனுஷுடனும் டூயட் பாடிக் கொண்டிருககிறார்.

    சிவாஜி முடியும் வரை வேறு படங்களில் நடிக்கக் கூடாது என இயக்குநர் ஷங்கர் தடைபோட்டுள்ளதால் கமல் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கை நழுவிப் போனது. இதனால்வருத்தத்தில் உள்ளார் ஷ்ரேயா. இருந்தாலும் சிவாஜி முடிந்த பிறகு வந்து நடிச்சுக்கொடுங்க என சில தயாரிபபாளர்கள் ஷ்ரேயாவிடம் இப்போதே அட்வான்ஸ் புக்கிங்செய்து வைத்துள்ளனராம்.

    சிவாஜி பட ஷூட்டிங்க்குக்கிடையே, ஷ்ரேயா அடிக்கடி மும்பைக்கு ஓடிவிடுகிறாராம். அம்மணி காதல் வலையில் சிககியுள்ளதாகவும், காதலை பார்த்துபேசத்தான் ஓடி விடுகிறார் எனறும் கோலிவுட்டில் குசுகுசிக்கிறார்கள்.

    மெய்யாலுமா என்று ஷ்ரேயாவிடம் போய் கேட்டால், அடிக்க வருகிறார். இதெல்லாம்சுத்த பேத்தல் செய்திப்பா. எனக்கு அப்படி ஒரு காதலரே கிடையாது. உண்மையைச்சொல்லனும்னா பாய் பிரண்ட் கூட எனக்குக் கிடையாது. நான் ரொம்ப நல்ல புள்ளைஎன்று சத்தியம் செய்கிறார்.

    எப்படி ஒரே நேரத்தில் மாமனாருடனும், மருமகனுடனும் ஜோடி போட முடிகிறதுஎன்று ஆச்சரியப்பட்டுக் கேட்டால், அதில் விசேஷம் ஏதும் இல்லை. இரண்டுமே நல்லகதை, இருவருமே நல்ல நடிகர்கள். இரண்டிலுமே எனக்கு ஏற்ற கேரக்டர்கள்.அதனால் தான் நடிக்க முடிகிறது.

    இதைச் சொல்கிறீர்களே, அப்பா, மகன் நடிகர்களுடன் பல நடிகைகள் இங்கே ஒரேநேரத்தில் ஜோடியாக நடிததுள்ளார்களே, அது முடியும் போது இது முடியாதா என்ன?

    இரண்டு படங்களுமே எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும் எனநம்பிக்கையாக கூறுகிறார் ஷ்ரேயா.

      Read more about: shreya in love
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X