சோனம் கபூருக்காக தீபிகாவை கழற்றி விட்டுட்டாரா சித்தார்த் மல்லையா?

சித்தார்த் மல்லையாவும் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவும் கடந்த சில மாதங்களாக காதலர்களாக வலம் வந்தனர். கடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றபோது கிரிக்கெட் மைதானத்தில் அத்தனை பேருக்கும் அதுவும் பக்கத்தில் தந்தையை வைத்துக் கொண்டே சித்தார்த் தீபிகாவின் உதட்டில் முத்தமிட்டதை, அவர்களின் உதடுகளும் மறந்திருக்க முடியாது, மற்றவர்களும் மறந்திருக்க முடியாது.
இப்படி ஒன்னுமண்ணாக திரிந்து வந்த தீபிகாவும், சித்தார்த்தும் இப்படி தனித் தனியே பிரிந்து போகும் நிலைக்குப் போய் விட்டனராம். இதுகுறித்த பேச்சுக்கள் கடந்த டிசம்பர் மாதமே பேச்சு அடிபட்டது. தற்போது அவர்கள் பிரிந்தே விட்டனர் என்று கூறப்படுகின்றது. சித்தார்த் தற்போது அனில் கபூரின் புத்திரி சோனம் கபூருடன், ஷோக்காக சுற்றுகிறாராம்.
இதேபோன்று தீபிகாவும் தான் முன்னர் காதலித்த மாடலும், வளர்ந்து வரும் நடிகருமான நிஹார் பாண்டியாவுடன், இணக்கமாகி விட்டதாக கூறப்படுகிறது.
அதேசமயம், சோனம் கபூர் ஏற்கனவே புனீத் மல்ஹோத்ரா என்பவரை டேட் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நேரத்தில் இருவருடன் 'டேட்' செய்வதால் 'ஏர் டைட்'டாகி விடாது...!!??
என்னத்தையோ பண்ணுங்கப்பா...!


Click it and Unblock the Notifications











