twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மாயமாகும் சிந்து துலானி ஸ்னேகா மாதிரியே சிந்து துலானியும் வெளிநாட்டுக்காரர் ஒருவரிடம் காதலில் விழுந்துவிட்டாராம்.மும்பையைச் சேர்ந்த சிந்து, சுள்ளான் மூலம் தமிழுக்கு வந்தார். தன் வரம்பு மீறிய கவர்ச்சியால் கலக்கிய சிந்துவைக் கண்டுஅச்சப்பட்டனர் கோலிவுட் குமரிகள். ஆனால், ஒத்துழைப்பு விஷயத்தில் அவர் ஒத்து வராததால் ஒதுக்கப்பட்டார்.அதையும் மீறி அலையடிக்குதே என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. தன்னோடு தனது தங்கை நேகா துலானிக்கும் வாய்ப்புவாங்கித் தந்து இருவரும் சேர்ந்து கவர்ச்சியில் கலக்கினர். ஆனால், படம் ஓடாததால் சிந்துவை ஒட்டுமொத்தமாய் மறந்துவிட்டதுகோலிவுட்.இடையில் சிம்புவின் மன்தனில் சின்ன ரோல் கிடைத்தது.இதையடுத்து அய்த்தே என்ற படத்தின் மூலம் தெலுங்குக்குப் போனார் சிந்து. அங்கு சிந்துவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்புகிடைத்துள்ளது.மூர்த்தி சிறிது என்றாலும் கீர்த்தி பெரிது என்பதால் அவரை அல்வா மாதிரி அள்ளிக் கொண்டார்கள். பெரிசுகள், இளசுகள் என்றுபேதம் பார்க்காமல் அனைவருடனும் ஜோடி சேர்ந்து கலக்கி வருகிறார்.மஜாவை தெலுங்கில் ரிலீஸ் செய்ய திட்டமிட்ட அதன் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கஷ்ே, சிந்து இருந்தால் தெலுங்கில்படத்துக்கு நல்ல மவுசு கிடைக்கும் என்பதால் அவரை ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆட வைத்தார். அந்த அளவுக்கு சிந்து அங்கேஇடம் பிடித்துவிட்டார்.அறிந்தும் அறியாமலும் உள்ளிட்ட சில படங்களில் நடித்த நவ்தீப்புடன் இப்போது எஸ்.எஸ்.சி என்ற ஒரு படத்தில் அநியாயகவர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறார் சிந்து. சிந்துவும் மது சர்மா என்ற இன்னொரு அம்மணியும் இருந்தாலும் கிளாமரில்துலானி தூக்கி அடித்துக் கொண்டிருக்கிறாராம்.இப்படியாக கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த சிந்து சமீப காலமாக சூட்டிங்கில் இருந்து திடீரென காணாமல் போவதுஅதிகரித்துள்ளதாம். எஸ்எஸ்சி சூட்டிங் நடந்து கொண்டிருந்தபோதே சொல்லாமல் கொள்ளாமல் சிந்து எஸ் ஆகிவிட,யூனிட்காரர்கள் விசாரித்தபோது அவர் துபாயில் இருப்பது தெரிந்ததாம்.துபாய்க்கு எதுக்கு திடீரென போனார் என்று அவர்கள் நோண்டியபோது, அங்குள்ள ஒரு இளம் பிஸினஸ்மேனுடன் சிந்து துலானி,சிந்து பாடிக் கொண்டிருந்தது தெரிய வந்ததாம்.சிந்து மீது பைத்தியமே ஆகிவிட்ட அந்த இளம் தொழிலதிபர் துலானிக்கு அவரது சொந்த ஊரான மும்பையிலும் பெங்களூரிலும்பெரும் பணச் செலவில் இரண்டு பிளாட்களை வாங்கித் தந்துள்ளாராம் அன்புப் பரிசாக.இதனால் அவரைப் பார்க்க அடிக்கடி துபாய் பக்கம் பறந்துவிடுகிறாராம் சிந்து.

    By Staff
    |

    ஸ்னேகா மாதிரியே சிந்து துலானியும் வெளிநாட்டுக்காரர் ஒருவரிடம் காதலில் விழுந்துவிட்டாராம்.

    மும்பையைச் சேர்ந்த சிந்து, சுள்ளான் மூலம் தமிழுக்கு வந்தார். தன் வரம்பு மீறிய கவர்ச்சியால் கலக்கிய சிந்துவைக் கண்டுஅச்சப்பட்டனர் கோலிவுட் குமரிகள். ஆனால், ஒத்துழைப்பு விஷயத்தில் அவர் ஒத்து வராததால் ஒதுக்கப்பட்டார்.

    அதையும் மீறி அலையடிக்குதே என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. தன்னோடு தனது தங்கை நேகா துலானிக்கும் வாய்ப்புவாங்கித் தந்து இருவரும் சேர்ந்து கவர்ச்சியில் கலக்கினர். ஆனால், படம் ஓடாததால் சிந்துவை ஒட்டுமொத்தமாய் மறந்துவிட்டதுகோலிவுட்.

    இடையில் சிம்புவின் மன்தனில் சின்ன ரோல் கிடைத்தது.


    இதையடுத்து அய்த்தே என்ற படத்தின் மூலம் தெலுங்குக்குப் போனார் சிந்து. அங்கு சிந்துவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்புகிடைத்துள்ளது.

    மூர்த்தி சிறிது என்றாலும் கீர்த்தி பெரிது என்பதால் அவரை அல்வா மாதிரி அள்ளிக் கொண்டார்கள். பெரிசுகள், இளசுகள் என்றுபேதம் பார்க்காமல் அனைவருடனும் ஜோடி சேர்ந்து கலக்கி வருகிறார்.

    மஜாவை தெலுங்கில் ரிலீஸ் செய்ய திட்டமிட்ட அதன் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கஷ்ே, சிந்து இருந்தால் தெலுங்கில்படத்துக்கு நல்ல மவுசு கிடைக்கும் என்பதால் அவரை ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆட வைத்தார். அந்த அளவுக்கு சிந்து அங்கேஇடம் பிடித்துவிட்டார்.


    அறிந்தும் அறியாமலும் உள்ளிட்ட சில படங்களில் நடித்த நவ்தீப்புடன் இப்போது எஸ்.எஸ்.சி என்ற ஒரு படத்தில் அநியாயகவர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறார் சிந்து. சிந்துவும் மது சர்மா என்ற இன்னொரு அம்மணியும் இருந்தாலும் கிளாமரில்துலானி தூக்கி அடித்துக் கொண்டிருக்கிறாராம்.

    இப்படியாக கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த சிந்து சமீப காலமாக சூட்டிங்கில் இருந்து திடீரென காணாமல் போவதுஅதிகரித்துள்ளதாம். எஸ்எஸ்சி சூட்டிங் நடந்து கொண்டிருந்தபோதே சொல்லாமல் கொள்ளாமல் சிந்து எஸ் ஆகிவிட,யூனிட்காரர்கள் விசாரித்தபோது அவர் துபாயில் இருப்பது தெரிந்ததாம்.


    துபாய்க்கு எதுக்கு திடீரென போனார் என்று அவர்கள் நோண்டியபோது, அங்குள்ள ஒரு இளம் பிஸினஸ்மேனுடன் சிந்து துலானி,சிந்து பாடிக் கொண்டிருந்தது தெரிய வந்ததாம்.

    சிந்து மீது பைத்தியமே ஆகிவிட்ட அந்த இளம் தொழிலதிபர் துலானிக்கு அவரது சொந்த ஊரான மும்பையிலும் பெங்களூரிலும்பெரும் பணச் செலவில் இரண்டு பிளாட்களை வாங்கித் தந்துள்ளாராம் அன்புப் பரிசாக.

    இதனால் அவரைப் பார்க்க அடிக்கடி துபாய் பக்கம் பறந்துவிடுகிறாராம் சிந்து.

      Read more about: sindhu dulani in love
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X