குடும்பத்துடன் சேரத்துடிக்கும் ஒல்லி நடிகர்.. மனைவிக்கு சமாதானத் தூது.. கெடு விதித்த மனைவி!
சென்னை : ஒல்லி நடிகர் தற்போது தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
ஆடு பகை, குட்டி உறவு என்றுதான் இவர் இருந்து வந்தார். மகன்களுடன் இளையராஜா இசைநிகழ்ச்சிளிலும் பங்கேற்றார்.
இந்நிலையில் தன்னுடைய மனைவியுடன் மீண்டும் சேர இவர் விருப்பம் தெரிவித்து பேசி வருகிறாராம்.

சிறப்பான ஒல்லி நடிகர்
தன்னுடைய பள்ளி காலத்தில் இருந்தே நடித்து வருகிறார் ஒல்லி நடிகர். தன்னுடைய அப்பா, தொடர்ந்து அண்ணன் என இவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் இவருக்கு நெகட்டிவ் விமர்சனங்களையும் அதன்மூலம் சிறப்பான வரவேற்பையும் பெற்றுத் தந்தன. விளைவு பத்தாவது கூட முடிக்காத இவர் தற்போது ஹாலிவுட் படங்களில் களைகட்டி வருகிறார்.

பாலிவுட் -ஹாலிவுட்டிலும் படங்கள்
இவரது நடிப்பில் கோலிவுட்டில் மட்டுமில்லாமல் பாலிவுட், ஹாலிவுட்டிலும் படங்கள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் பாலிவுட்டில் இவரது நடிப்பில் வெளியான படத்தில் இவரது இயல்பான நடிப்பு பேசப்பட்டது. தொடர்ந்து இந்த மாதத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஹாலிவுட் படமும் வெளியாகவுள்ளது.

ஓடிடி ரிலீஸ் படங்கள்
தொடர்ந்து தமிழிலும் இவரது அடுத்தடுத்த படங்களில் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. சமீபத்தில் ஓடிடியில் வெளியான இவரது படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. அடுத்தப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், அந்தப் படம் சிறப்பாக கைக்கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

அடுத்தடுத்த படங்கள்
இந்தப் படத்தின் போஸ்டர்கள், பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ளன. விரைவில் படம் ரிலீசாக உள்ள நிலையில், அடுத்ததாக தன்னுடைய அண்ணனின் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனிடையே தமிழ், தெலுங்கில் உருவாகிவரும் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

விவாகரத்து முடிவு
இவ்வாறு அடுத்தடுத்த படங்கள் என்று பிசியாக இருக்கும் ஒல்லி நடிகர், உச்ச நடிகரின் மூத்த மகளுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவாகரத்து முடிவை அறிவித்திருந்தார். இவர்களை சேர்த்து வைக்கும் குடும்பத்தினரின் முயற்சி பலிக்கவில்லை. இருவரும் தங்களது கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

மனைவியுடன் இணைய விருப்பம்
இந்நிலையில் இந்த விவாகரத்து முடிவால் தனது கேரியர் பாதிக்கப்படுவதையும் உணர்ந்துக் கொண்ட ஒல்லி நடிகர், மீண்டும் மனைவியுடன் இணைய விருப்பம் தெரிவித்து காய் நகர்த்தி வருகிறாராம். ஆனால் இதனை உடனடியாக ஏற்றுக் கொள்ள மனைவி மறுத்துவிட்டாராம்.

கெடு விதித்த மனைவி
உடனடியாக ஒல்லி நடிகரை நம்ப தான் தயாராக இல்லை என்றும் சில மாதங்கள் கண்காணித்துவிட்டு முடிவை சொல்வதாகவும் அவர் கூறினாராம். இதனால் அவர்களது திருமண நாளான நவம்பர் 18ம் தேதி இந்த விஷயத்தில் தெளிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நடிகரின் பிறந்தநாள் இந்த மாதத்தில் வரும் நிலையில் அன்றைய தினம் ஏதாவது அறிவிக்கப்படுமா என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











