Don't Miss!
- Automobiles ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- News நிலைமை கைமீறிடுச்சி.. அமெரிக்கா, யு.கேவிற்கு போன அதிகாரபூர்வ அணு அட்டாக் வார்னிங்! யார் அனுப்புவது?
- Lifestyle Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இந்திக்கு நோ சொன்ன ஸ்னேகா இந்தியில் முன்னணி ஹீரோவுடன் நடிக்க வந்த வாய்ப்பை ஸ்னேகா மறுத்துவிட்டாராம். ஏன் தெரியுமா? இந்தியில் கவர்ச்சிஅதிகமாக காட்ட வேண்டியிருக்குமாம்.தமிழில் இப்போது குடும்பப் பாங்காக நடிப்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த வரிசையில் தான் நம்ம புன்னகைஅரசி ஸ்னேகாவும் இருந்தார் ஒரு காலத்தில்.ஆனால் இப்போது நிலைமை எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. ஸ்னேகாவா இப்படி? என்று கேட்கும் அளவிற்கு கவர்ச்சியில்புகுந்து விளையாட ஆரம்பித்து விட்டார். இதற்கு சமீபத்தைய உதாரணம் தான் சின்னா.இந்தப் படத்தில் ஸ்னேகா, அர்ஜூனுடன் நடித்து வருகிறார். ஒரு பாடல் காட்சிக்காக கோவா கடற்கரையில் ஸ்னேகா போட்டஆட்டம் அனைவரையும் புல்லரிக்க வைத்துவிட்டது. ஸ்னேகாவின் இந்த ஜலக்கிரீடை பற்றி கேள்விப்பட்டதும் கோவாகடற்கரையில் பெரும் கூட்டமே கூடிவிட்டது.பிறகு போலீஸ் பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடந்தது வேறு விஷயம். சின்னாவில் ஸ்னேகா போட்ட துள்ளாட்டம் வில்வித்தைநடிகருக்கு ரொம்பப் பிடித்துப் போகவே, அவரது அடுத்த படத்தில் உடனடியாக புக் செய்துவிட்டார்.சின்னா வெளிவந்தால் கோலிவுட் தயாரிப்பாளர்கள் இனிமேல் குத்தாட்டக்காரிகளை தேடி மும்பைக்கு செல்ல வேண்டியஅவசியமே இருக்காது என்று சொல்லும் அளவுக்கு ஸ்னேகாவின் ஆட்டம் இருக்குமாம்.ஸ்னேகாவின் இந்த பலான ஆட்டம் குறித்த தகவல் பாலிவுட்காரர்களின் காதுகளுக்கு போனதோ என்னவோ, ஒரு இந்திப்படத்தில் ஒப்பந்தம் செய்ய ஸ்னேகாவை அணுகியுள்ளார்கள். அதுவும் தற்போது முன்னணியில் உள்ள ஒரு ஹீரோ தான் நாயகன்.பழம் நழுவி பாலில் விழுந்து அது நழுவி தேனில் விழுந்த கதையாக யாருக்காவது இப்படிப்பட்ட வாய்ப்பு வந்தால்விடுவார்களா?ஆனால் ஸ்னேகா இந்த வாய்ப்புக்கு "நோ சொல்லிவிட்டாராம். இந்திப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதான்னு எத்தனையோபேர் ஏங்கிக் கிடக்கும் போது நீங்கள் ஏன் மறுத்து விட்டீர்கள் என்றால், அய்யய்யோ.. இந்திப் படத்தில் ரொம்ப கவர்ச்சி காட்டச்சொல்வார்கள்.அது நமக்கு ஒத்துவராது. இதனால் வாய்ப்பு கேட்டு வந்த போது நான் முடியாது என்று சொல்லி விட்டேன். இப்போதுமுன்னணியில் இருக்கும் ஹீரோ தான் நாயகன் என்று சொன்னார்கள். ஆனாலும் நான் முடியாது என்று மறுத்து விட்டேன் என்கிறார்ஸ்னேகா.அப்போ.. சின்னாவில் கவர்ச்சி ஆட்டம் போட்டது அவ்வளவு சீக்கிரம் மறந்து விட்டதா என்ன?
இந்தியில் முன்னணி ஹீரோவுடன் நடிக்க வந்த வாய்ப்பை ஸ்னேகா மறுத்துவிட்டாராம். ஏன் தெரியுமா? இந்தியில் கவர்ச்சிஅதிகமாக காட்ட வேண்டியிருக்குமாம்.
தமிழில் இப்போது குடும்பப் பாங்காக நடிப்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த வரிசையில் தான் நம்ம புன்னகைஅரசி ஸ்னேகாவும் இருந்தார் ஒரு காலத்தில்.
ஆனால் இப்போது நிலைமை எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. ஸ்னேகாவா இப்படி? என்று கேட்கும் அளவிற்கு கவர்ச்சியில்புகுந்து விளையாட ஆரம்பித்து விட்டார். இதற்கு சமீபத்தைய உதாரணம் தான் சின்னா.
இந்தப் படத்தில் ஸ்னேகா, அர்ஜூனுடன் நடித்து வருகிறார். ஒரு பாடல் காட்சிக்காக கோவா கடற்கரையில் ஸ்னேகா போட்டஆட்டம் அனைவரையும் புல்லரிக்க வைத்துவிட்டது. ஸ்னேகாவின் இந்த ஜலக்கிரீடை பற்றி கேள்விப்பட்டதும் கோவாகடற்கரையில் பெரும் கூட்டமே கூடிவிட்டது.
பிறகு போலீஸ் பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடந்தது வேறு விஷயம். சின்னாவில் ஸ்னேகா போட்ட துள்ளாட்டம் வில்வித்தைநடிகருக்கு ரொம்பப் பிடித்துப் போகவே, அவரது அடுத்த படத்தில் உடனடியாக புக் செய்துவிட்டார்.
சின்னா வெளிவந்தால் கோலிவுட் தயாரிப்பாளர்கள் இனிமேல் குத்தாட்டக்காரிகளை தேடி மும்பைக்கு செல்ல வேண்டியஅவசியமே இருக்காது என்று சொல்லும் அளவுக்கு ஸ்னேகாவின் ஆட்டம் இருக்குமாம்.
ஸ்னேகாவின் இந்த பலான ஆட்டம் குறித்த தகவல் பாலிவுட்காரர்களின் காதுகளுக்கு போனதோ என்னவோ, ஒரு இந்திப்படத்தில் ஒப்பந்தம் செய்ய ஸ்னேகாவை அணுகியுள்ளார்கள். அதுவும் தற்போது முன்னணியில் உள்ள ஒரு ஹீரோ தான் நாயகன்.
பழம் நழுவி பாலில் விழுந்து அது நழுவி தேனில் விழுந்த கதையாக யாருக்காவது இப்படிப்பட்ட வாய்ப்பு வந்தால்விடுவார்களா?
ஆனால் ஸ்னேகா இந்த வாய்ப்புக்கு "நோ சொல்லிவிட்டாராம். இந்திப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதான்னு எத்தனையோபேர் ஏங்கிக் கிடக்கும் போது நீங்கள் ஏன் மறுத்து விட்டீர்கள் என்றால், அய்யய்யோ.. இந்திப் படத்தில் ரொம்ப கவர்ச்சி காட்டச்சொல்வார்கள்.
அது நமக்கு ஒத்துவராது. இதனால் வாய்ப்பு கேட்டு வந்த போது நான் முடியாது என்று சொல்லி விட்டேன். இப்போதுமுன்னணியில் இருக்கும் ஹீரோ தான் நாயகன் என்று சொன்னார்கள். ஆனாலும் நான் முடியாது என்று மறுத்து விட்டேன் என்கிறார்ஸ்னேகா.
அப்போ.. சின்னாவில் கவர்ச்சி ஆட்டம் போட்டது அவ்வளவு சீக்கிரம் மறந்து விட்டதா என்ன?