Don't Miss!
- News நாங்க ஆகம விதி நிபுணர்கள் அல்ல.. பிடிஆர் தாயிடம் செங்கோல் தர எதிர்க்கும் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
- Finance பெங்களூர் தண்ணீர் பஞ்சத்தில் இப்படியொரு பிரச்சனையா..? அதிர்ச்சியான விஷயம் தான்..!
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Sports மும்பை இந்தியன்சின் ஏமாற்று வேலைக்கு இனி ஆப்பு.. புதிய நடைமுறையை கொண்டு வந்த ஐபிஎல் நிர்வாகம்
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சோனியா காதல் முறிவு: உபயம்- ஸ்னேகா! செல்வராகவன்-சோனியா அகர்வால் காதலில் டமார் என்று வெடிப்பு ஏற்பட்டுவிட்டதாம். இதற்குக் காரணம் ஸ்னேகா தான்என்கிறார்கள்.செல்வாவின் வீட்டில் தம்பி தனுஷ், தங்கைகளுக்கு எல்லாம் திருமணமாகிவிட்டது. ஆனால், செல்வா மட்டும் தொடர்ந்துபேச்சிலராகவே இருந்து வருகிறார். அவருக்கும் சோனியா அகர்வாலுக்கும் இடையிலான காதல் அனைவரும் அறிந்ததே.தனுஷ்-ரஜினி மகள் ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தின்போதும், திருமணத்தின்போதும் தனுஷ் குடும்பத்துத்து மூத்த மருமகள்போலவே வலம் வந்தார் சோனியா.இப்போது அவர்களது காதலில் பெரிய விரிசலாம். செல்வராகவன் இயக்கும் புதுப்பேட்டை படத்தில் சோனியாவோடு,ஸ்னேகாவும் நடிக்கிறார். முதலில் சோனியாவுக்குத் தான் முக்கிய வேடம் தரப்பட்டிருந்தது. ஸ்னேகாவுக்கு அதில் விபச்சாரப்பெண் வேடம்.ரொம்ப பவர்புல் ரோல் என்று சொல்லி ஸ்னேகாவை நடிக்க வைத்தார் செல்வா. கொடுக்கப்பட்ட ரோலை மிக அழகாகச் செய்தஸ்னேகா மீது செல்வாவுக்கு தனிப் பிரியம் வந்துவிட்டதாம். இதையடுத்து படத்தில் அவருக்கான ஸ்கோப்பைக் கூட்டி அவரதுவேடத்தை சோனியாவை விட முக்கிய வேடமாக்கிவிட்டாராம் செல்வா.அதிலிருந்தே செல்வா-சோனியா இடையே சிறிய உரசல்கள் ஆரம்பித்தனவாம். ஆனால், அதைக் கண்டுகொள்ளாத செல்வா,ஸ்னேகாவுக்கு ரொம்பவும் நெருக்கமாகிவிட்டாராம்.இதையடுத்து ஸ்னேகாவுக்கும் சோனியாவுக்கும் இடையே பனிப்போர் வெடித்து, கடைசியில் போனில் திட்டிக் கொள்ளும்அளவுக்குப் போயிருக்கிறது. இப்போது சண்டை முற்றி விவகாரம் வெளிச்சத்துக்கும் வந்துவிட்டது.இந் நிலையில் தான் சமீபத்தில் பத்திரிக்கைக்குப் பேட்டியளித்த சோனியா, நான் ரொம்ப பொசசிவ், வேறு ஒரு பெண்ணுடன்பழகும் நபரை நான் திருமணம் செய்ய மாட்டேன் என்று பொடி வைத்துப் பேசியிருந்தார்.இதற்குப் பதிலடியாக தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த செல்வராகவன், நான் சினிமா சம்பந்தப்பட்ட பெண்னை மணம் முடிக்கமாட்டேன். வீட்டில் எனக்குப் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.இதற்கிடையே செல்வா-சோனியா பிரிவை செல்வா-ஸ்னேகா காதல் என்று முடிச்சுப் போட்டு கோடம்பாக்கத்தில் பெரும் கிசுகிசுபரவியிருக்கிறது. ஸ்னேகா தன் வாழ்க்கையில் இடையில் வந்துவிட்டதாக சோனியா நினைப்பதாக சொல்கிறார்கள்.ஆனால், யாருடனும் காதலும் இல்லை கத்திரிக்காயும் இல்லை என்கிறது ஸ்னேகா தரப்பு. மொத்தத்தில் ஒரு காதல் ஜோடிக்குஸ்னேகாவால் கத்திரி விழுந்தது மட்டும் உண்மை.
செல்வராகவன்-சோனியா அகர்வால் காதலில் டமார் என்று வெடிப்பு ஏற்பட்டுவிட்டதாம். இதற்குக் காரணம் ஸ்னேகா தான்என்கிறார்கள்.
செல்வாவின் வீட்டில் தம்பி தனுஷ், தங்கைகளுக்கு எல்லாம் திருமணமாகிவிட்டது. ஆனால், செல்வா மட்டும் தொடர்ந்துபேச்சிலராகவே இருந்து வருகிறார். அவருக்கும் சோனியா அகர்வாலுக்கும் இடையிலான காதல் அனைவரும் அறிந்ததே.
தனுஷ்-ரஜினி மகள் ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தின்போதும், திருமணத்தின்போதும் தனுஷ் குடும்பத்துத்து மூத்த மருமகள்போலவே வலம் வந்தார் சோனியா.
இப்போது அவர்களது காதலில் பெரிய விரிசலாம். செல்வராகவன் இயக்கும் புதுப்பேட்டை படத்தில் சோனியாவோடு,ஸ்னேகாவும் நடிக்கிறார். முதலில் சோனியாவுக்குத் தான் முக்கிய வேடம் தரப்பட்டிருந்தது. ஸ்னேகாவுக்கு அதில் விபச்சாரப்பெண் வேடம்.
ரொம்ப பவர்புல் ரோல் என்று சொல்லி ஸ்னேகாவை நடிக்க வைத்தார் செல்வா. கொடுக்கப்பட்ட ரோலை மிக அழகாகச் செய்தஸ்னேகா மீது செல்வாவுக்கு தனிப் பிரியம் வந்துவிட்டதாம். இதையடுத்து படத்தில் அவருக்கான ஸ்கோப்பைக் கூட்டி அவரதுவேடத்தை சோனியாவை விட முக்கிய வேடமாக்கிவிட்டாராம் செல்வா.
அதிலிருந்தே செல்வா-சோனியா இடையே சிறிய உரசல்கள் ஆரம்பித்தனவாம். ஆனால், அதைக் கண்டுகொள்ளாத செல்வா,ஸ்னேகாவுக்கு ரொம்பவும் நெருக்கமாகிவிட்டாராம்.
இதையடுத்து ஸ்னேகாவுக்கும் சோனியாவுக்கும் இடையே பனிப்போர் வெடித்து, கடைசியில் போனில் திட்டிக் கொள்ளும்அளவுக்குப் போயிருக்கிறது. இப்போது சண்டை முற்றி விவகாரம் வெளிச்சத்துக்கும் வந்துவிட்டது.
இந் நிலையில் தான் சமீபத்தில் பத்திரிக்கைக்குப் பேட்டியளித்த சோனியா, நான் ரொம்ப பொசசிவ், வேறு ஒரு பெண்ணுடன்பழகும் நபரை நான் திருமணம் செய்ய மாட்டேன் என்று பொடி வைத்துப் பேசியிருந்தார்.
இதற்குப் பதிலடியாக தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த செல்வராகவன், நான் சினிமா சம்பந்தப்பட்ட பெண்னை மணம் முடிக்கமாட்டேன். வீட்டில் எனக்குப் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.
இதற்கிடையே செல்வா-சோனியா பிரிவை செல்வா-ஸ்னேகா காதல் என்று முடிச்சுப் போட்டு கோடம்பாக்கத்தில் பெரும் கிசுகிசுபரவியிருக்கிறது. ஸ்னேகா தன் வாழ்க்கையில் இடையில் வந்துவிட்டதாக சோனியா நினைப்பதாக சொல்கிறார்கள்.
ஆனால், யாருடனும் காதலும் இல்லை கத்திரிக்காயும் இல்லை என்கிறது ஸ்னேகா தரப்பு. மொத்தத்தில் ஒரு காதல் ஜோடிக்குஸ்னேகாவால் கத்திரி விழுந்தது மட்டும் உண்மை.