மனைவியின் அரசியல் ஆசை.. வீட்டுக்கு போகாத உச்ச நடிகர்... பின்னணியில் இருக்கும் குடும்ப பஞ்சாயத்து!
சென்னை: சினிமாவில் பல தசாப்தங்களாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் அந்த உச்ச நடிகர், வழக்கமாக ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் மன அமைதிக்காக வட இந்திய மலைப் பிரதேசத்திற்கு பயணம் மேற்கொள்வது வழக்கம். ஆனால், இந்த முறை அவர் ரூட்டை மாற்றி தென்னிந்திய மலைக்கு விசிட் அடித்துள்ளார். அங்கேயும் ரசிகர்கள் கூட்டம் மொய்த்ததால், தற்போது பக்கத்து மாநிலத்திற்கு சென்று ஓய்வெடுத்து வருகிறார்.
படப்பிடிப்பு முடிந்து இத்தனை நாட்களாகியும் அந்த டாப் நடிகர் இன்னும் தன் சொந்த வீட்டுக்கு சென்று மனைவியை பார்க்கவே இல்லையாம். இப்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக் இதுதான். ஏன் இன்னும் வீட்டுக்கு போகல? என விசாரித்தால், பின்னணியில் ஒரு பெரிய குடும்பப் பிணக்கு ஓடிக்கொண்டு இருக்கிறது.

அரசியல் ஆசை: அந்த உச்ச நடிகருக்குத் தன் வாழ்நாளில் எந்தச் சூழ்நிலையிலும் அரசியலுக்கு வர விருப்பமில்லை என்பதில் ஆரம்பத்திலிருந்தே மிகத் தெளிவாக இருந்தார். பல பொன்னான வாய்ப்புகள் தேடி வந்தபோதும், அவர் அதைத் தட்டிகழித்து ஒதுங்கியே இருந்தார். ஆனால், சமீபத்தில் சினிமாவில் இருந்து வந்த ஒரு இளம் டாப் நடிகர், கட்சி ஆரம்பித்து சில ஆண்டுகளிலேயே உயரிய நாற்காலியில் அமைந்துவிட்டார். இந்தத் திடீர் அரசியல் மாற்றம், உச்ச நடிகரின் மனைவியின் மனதில் அரசியல் ஆசையைத் தூண்டியுள்ளதாம். அன்றே என் கணவர் நினைத்திருந்தால் அந்த நாற்காலியில் அமர்ந்திருக்கலாம. அதைத் தவறவிட்டுவிட்டோமே என்ற ஆதங்கத்தில், தற்போது அந்த நடிகரின் மனைவி சொந்தமாக ஒரு இயக்கத்தை தொடங்கி இருக்கிறார்.
ஈகோ யுத்தம்: தற்காலிகப் பிரிவு: தன் பேச்சையும் மீறி மனைவி இப்படித் திடீரென பொது வாழ்க்கையிலும், மறைமுக அரசியலிலும் இறங்குவது அந்த உச்ச நடிகருக்கு பிடிக்கவில்லை. அந்த கோபத்தின் காரணமாகவே, மனைவியிடம் இருந்து கொஞ்ச நாள் தள்ளி இருக்க வேண்டும் என்று முடிவு செய்து, வீட்டிற்குப் போகாமல் இப்படி ஊர் ஊராகச் சுற்றி வருகிறாராம். உச்ச நடிகர், தன் மனைவியை எப்போதும் ஒரு குடும்பத் தலைவியாக மட்டுமே இருக்க வேண்டும் என விரும்புகிறார். மனைவியின் இந்த அதிரடி அரசியல் ஆசையால், உச்ச நடிகரின் குடும்பத்தில் எழுந்துள்ள இந்த 'ஈகோ' யுத்தம் எப்போது முடிவுக்கு வரும் என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications