Don't Miss!
- News அமேதி தொகுதியில் ராகுல் காந்தி "மைத்துனர்" ராபர்ட் வதேரா போட்டியா? காங்கிரஸ் போஸ்டர்களால் பரபரப்பு!
- Technology ATM.. டெபிட் கார்டு.. கிரெடிட் கார்டு இருக்கா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட புது விதி.. இனி சிக்கலே இருக்காது..
- Automobiles இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தாதாவுக்கு டாடா... மீண்டும் ‘குச்சி’யை கையில் எடுக்கும் சூப்பர் நடிகர்!
முந்தைய பட தோல்வியால் புதிய படத்தில் வாத்தியாராகி இருக்கிறார் சூப்பர் நடிகர்.
Recommended Video
சென்னை: தனது தாதா படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் எதிர்பார்த்த வெற்றியைத் தராததால் மனமுடைந்து போயுள்ள சூப்பர் நடிகர், அடுத்ததாக தான் நடித்து வரும் படத்தில் வாத்தியாராக நடிக்க உள்ளாராம்.
ஒருமுறைக்கு இருமுறை ஒரே இயக்குநருக்கு வாய்ப்பளித்தார் நடிகர். ஆனால், இரண்டு படங்களையும் தனக்கு சாதகமாக்கிக் கொண்ட இயக்குநரோ, தான் சொல்ல வேண்டிய விசயத்தை மட்டும் நடிகரைப் பயன்படுத்தி மக்களுக்கு சொல்லிக் கொண்டார்.
இதனால் வழக்கமாக நடிகரின் படத்தில் இடம்பெறும் காமெடி உள்ளிட்ட இத்யாதிக்கள் மிஸ்ஸானது. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை ரசிகர்களைக் கொண்டவர் நடிகர். எனவே, படத்தைப் பார்த்த பலருக்கு, நடிகரின் தாதா வேடம் அவ்வளவாக ரசிக்கும்படி இல்லை.
இது வசூலிலும் எதிரொலித்தது. அதிக தியேட்டர்களில் ரிலீசான போதும், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படம் பலத்த அடி வாங்கியது. எனவே, உடனடியாக மக்களைத் திருப்தி படுத்தும் வகையில் படம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் நடிகர் இருக்கிறார்.
இதனால் தான் தற்போது நடித்து வரும் படத்தில், வாத்தியாராக அரிதாரம் பூசி இருக்கிறார் நடிகர். கூடவே, செண்டிமெண்டிற்காக இப்படத்தில் தனது அறிமுக பாடலையும் ராசியான பாடகரை வைத்து பாட வைத்திருக்கிறார்.