’பார்’ட்டியில் நடிகைகளை கசக்கி எடுத்த நடிகர்.. வயசு வித்தியாசமே பார்க்கல.. கட்டுப்படுத்தவே முடியலயாம்
சென்னை: பிரபலமான நடிகர் அவர். சமீபத்தில் நடைபெற்ற பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அந்த பார்ட்டியில் கலந்து கொள்ள நடிகைகள் வந்துள்ளனர். அவர்களைப் பார்த்த நடிகர், ஒருவர் மாறி ஒருவர் மீது பாய்ந்து பாய்ந்து விழுந்துள்ளார். இதில் இளம் நடிகை, மூத்த நடிகை என எந்த வித்தியாசமும் பார்க்காமல் அந்த நடிகரின் பாய்ச்சலைப் பார்த்து நடிகைகளுக்கு பயமே வந்துவிட்டதாம். அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
பல வருடங்களாக பெரும் வெற்றிக்கு காத்திருந்த நடிகர் அவர். யாருமே எதிர்பார்க்காத நிலையில் அவரது படம் ரிலீஸ் ஆகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. படத்தின் ரிலீஸ்க்கு முன்னரே, அந்த நடிகரின் சில நடவடிக்கைகள் தமிழ் சினிமா உலகையே உலுக்கியது. நடிகர் அவ்வாறு நடந்து கொள்ள காரணமே அவரது போதைப் பழக்கம்தான் எனவும் கூறப்பட்டது. இதனால் ஏற்பட்ட சலசலப்பு படத்தின் புரோமோசனுக்கும் வேற லெவலில் உதவ, படமும் ஹிட் அடித்துவிட்டது.

இப்படியான நிலையில் அந்த நடிகர் ஒரு மிட் நைட் 'பார்'ட்டியில் கலந்து கொண்டுள்ளார். அந்த பார்ட்டிக்கு பல முன்னணி நடிகைகளும் வந்துள்ளார்கள். அவர்களைப் பார்த்த நடிகர் முதலில் குட் பாய் போல, வணக்கம் எல்லாம் சொல்லிவிட்டு அமைதியாக இருந்துள்ளார். ஆனால் இந்த பார்ட்டியில் இவர் இருப்பார் எனத் தெரிந்து வந்த நடிகைகளுக்கு இருந்த ஷாக், இவரு இப்படி எல்லாம் இருக்க மாட்டாரே என்பதுதான்.
மோசமாக கமெண்ட்: பார்ட்டியில் நேரம் ஆக ஆக நடிகருக்கு போதை கொஞ்சம் கொஞ்சமாக ஏறியுள்ளது. இங்கு இருந்துதான் பிரச்னையே ஆரம்பம் ஆகியுள்ளது. அதாவது, பார்ட்டியில் சுமார் 20 நடிகைகள் வரை கலந்து கொண்டுள்ளனர். அவர்களில் ஒவ்வொருவரிடமும் மெல்ல பேச ஆரம்பித்த நடிகர், அதன் பின்னர் கட்டிப்பிடித்து கசக்கி எடுத்துவிட்டாராம். இவர் பிடித்த பிடி தாங்க முடியாத ஒரு நடிகை கத்தியே விட்டாராம், பாவம். இதுமட்டும் இல்லாமல், ஓவர் போதையில் நடிகைகளின் உடைகள் குறித்தும் அவர்களின் உருவங்கள் குறித்தும் அந்த நடிகர் மோசமாக கமெண்ட் அடித்துள்ளார். சில நடிகைகளை கட்டிப்பிடிக்கின்றேன் என கைகளை அங்கும் இங்கும் வைத்துள்ளார்.
வயது வித்தியாசமே: ராஜ போதையில் இருந்த நடிகர், இளம் நடிகை, மூத்த நடிகை என வயது வித்தியாசமே பார்க்காமல், ஒவ்வொருவர் மீதும் பாய்ந்து பாய்ந்து விழுந்துள்ளார். சில நடிகைகளுக்கு ஏன்டா இந்த பார்ட்டிக்கு வந்தோம் என ஆகிவிட்டதாம். நடிகரைக் கட்டுப்படுத்த பலரும் முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர் நடிகைகளை நோக்கி பாய்வதை நிறுத்தவே இல்லையாம். இதனால் பார்ட்டிக்கு வந்த நடிகைகள், ஆளை விட்டால் போதும் என பார்ட்டி முடிவதற்கு முன்னரே கிளம்பிவிட்டார்கள். நடிகைகள் சென்ற பின்னர்தான் அந்த நடிகர் கொஞ்சம் அமைதியாக இருந்துள்ளார். இனிமேல் அந்த நடிகர் பார்ட்டியில் கலந்து கொண்டால் அந்தப் பக்கமே திரும்பிப் பார்க்கக் கூடாது என நடிகைகள் சிலர் முடிவெடுத்துவிட்டார்கள். இந்த விஷயம் காதும் காதும் வைத்ததைப்போல் உலா வருகின்றது.


Click it and Unblock the Notifications











