மனைவியை விட்டுட்டு நடிகையோடு ஊர் சுற்றும் நடிகர்.. கையும் களவுமாக சிக்கியும் அப்பாவி மனைவி கப்சிப்!

By Staff

சென்னை: இந்த நடிகரை ஜகஜால கில்லாடி என்றுதான் கூறவேண்டும். இவர் வயசில் இருக்கும் சில நடிகர்களே இவரிடம் உனக்கு எங்கயோ மச்சம் இருக்கு என கிண்டல் அடிக்கும் அளவுக்கு நடிகரின் சேட்டைகள் இருந்து வருகிறதாம். அதுவும் நடிகர் நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருந்ததைப் பார்த்தும் அவரது மனைவி கப்சிப் என இருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இந்த நடிகர் தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவிலேயே மிகவும் கவனிக்கப்படுகிற நடிகராக உள்ளார். கல்யாணத்துக்கு முன்னரே நடிகர் தன்னுடன் நடித்த ஒரு நடிகையுடன் ஓவர் நெருக்கமாக இருந்தார். இதையெல்லாம் பார்த்த அந்த நடிகரின் அப்பாவே அவரை அழைத்து," ஏன் டா இப்படி இருக்க. உன்னைய நம்பி நான் பல திட்டங்கள் வெச்சு இருக்கிறேன். நீ என்னடா என்றால் அந்த நடிகை பின்னாடி சுத்தீட்டு இருக்கறயே" என்று கேட்டது மட்டும் இல்லாமல் அடிக்கவும் செய்துள்ளார். ஆனால் நடிகரோ நடிகையே கதி என இருந்துள்ளார். பழக பழக பாலும் புளிக்கும் எனக் கூறுவார்களே அதுபோல நடிகையை நடு ஆற்றில் விட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க போனவர்தான் இந்த நடிகர்.

ருசி கண்ட பூனை: இப்படியான நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் தான் அவரது மனைவி. நடிகர் தான் ருசி கண்ட பூனை ஆயாச்சே. நடிகையை எப்படி கழட்டி விட்டாரோ அதேபோல் தனது மனைவியையும் கழட்டி விட்டு விடலாம் என நினைத்துள்ளார். ஆனால் அவரது மனைவியின் செயல்களைப் பார்த்த அவருக்கு கொஞ்சம் புத்தி வந்ததுபோல் எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு இருந்துள்ளார்.

Tamil cinema Gossip Actor Wife Who Blackmail Actor And His Girlfriend Actress

ஓவர் நெருக்கம்: இப்படியான நிலையில் தான் அந்த நடிகையுடன் காம்பினேஷனில் நடிகர் ஒரு படத்தில் கமிட் ஆனார். முதல் படமே இவர்கள் இருவருக்கும் செம கெமிஸ்ட்ரி ஸ்டார்ட் ஆகிவிட்டதாம். அதன் பின்னர் இரண்டாவது படத்தில் இருவருக்கும் இடையிலான நெருக்கம் என்பது அதிகரித்துள்ளது. இப்படி இருக்கும்போது, அந்த நடிகருடன் படத்தில் கமிட் ஆனால், அவருடன் தனக்கு நெருக்கமான காட்சிகள் வேண்டும் என தனது உதவியாளர்களை வைத்தே இயக்குநர்களுக்கு தூது விட்டு வந்துள்ளார். இதனைப் பயன்படுத்திக் கொண்ட இயக்குநர்களும் நடிகையை ஓவர் கிளாமராக உடை அணியச் சொல்லி நடிக்க வைத்துள்ளனர். நடிகையும் ஓ.கே. சொல்ல நடிகரை ஒரு கட்டத்திற்கு மேல் மயக்கியே விட்டார் நடிகை.

கண்கூடப் பார்த்த மனைவி: இப்படி இருக்கையில் நடிகரும் நடிகையும் மிக நெருக்கமாக இருந்த போது நடிகரின் மனைவியே கண் கூடப் பார்த்துவிட்டார். இந்த விஷயம் வெளியே தெரிந்தால் என்ன ஆகுமோ என நடிகரும் நடிகையும் பயப்பட்டுள்ளார்கள். ஆனால் நடிகரின் மனைவியோ எதையும் வெளியே சொல்லாமல் அமைதியாக இருந்துள்ளார். நடிகரின் மனைவி இவர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்ததும் வெளியே சொல்லாமல் இப்போதுவரை அமைதியாக இருக்க என்ன காரணம் எனத் தெரியாமல் இருவரும் குழம்பிப்போய் உள்ளார்களாம். ஆனால் நடிகரின் மனைவியோ சமயம் பார்த்து இதை வெளியே சொல்ல காத்துக் கொண்டு உள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X