கறக்கும் வரை கறந்த இயக்குநர்.. ஆசை தீர்ந்ததும் எஸ்கேப்.. நம்பி நடுத் தெருவில் நிற்கும் நடிகை!
சென்னை: இந்த இயக்குநர் கொஞ்சம் ஏடாகூடமான ஆள். இன்னும் சொல்லப்போனால் இவரது வாய் தான் இவருக்கு பலம் மற்றும் பலவீனமாக உள்ளது. தனது படத்தில் நடித்த நடிகையை, பேசியே மயக்கி உள்ளார். நடிகையும் நன்றாக சிரிக்க சிரிக்க பேசுகிறார் என, இயக்குநர் மீது நல்ல அபிப்ராயத்துடன் இருந்துள்ளார். ஆனால் நாளாக நாளாக இருவருக்கும் இடையிலான நெருக்கம் அதிகரிக்க, பட வேலைகளில் கவனம் செலுத்துவதை குறைத்துக் கொண்டு, இருவரும் செம ஜாலியாக இருந்துள்ளார்கள். ஆனால் இப்போது நடிகை நடுத்தெருவில் இருக்கிறாராம். இடையில் நடந்ததுதான் பெரிய கூத்து.
இயக்குநருக்குத்தான் இந்த நடிகை மீது ஈர்ப்பு இருந்துள்ளது. நடிகை கமிட் ஆன படக்குழு தரப்பில் விசாரித்துப் பார்த்துள்ளார். ஆனால் நடிகை அட்ஜெஸ்மெண்ட்க்கு எல்லாம், நடிகை ஒத்து வரமாட்டார் எனக் கூறியுள்ளார்கள். இதனால் அப்செட் ஆன இயக்குநர், நடிகையை அடைந்தே தீரவேண்டும் என தனது படத்தில் நடிகையை கமிட் செய்துள்ளார்.

ஆனால் நடிகைக்கு இதெல்லாம் தெரியாமல் டீசண்ட் அப்ரோச் இருந்ததால், படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். கொஞ்சம் போக போக இயக்குநர் தனது தூண்டிலைப் போட்டுள்ளார். நடிகை இயக்குநர் மீது கொஞ்சம் அட்டென்சன் காட்டவே, இயக்குநர் வலையை விரித்துள்ளர். இயக்குநர் விரிக்கும் வலைக்குப் பின்னால் இருக்கும் காமவெறி தெரியாத நடிகை, இயக்குநருடன் நன்றாக பேசி பழகி வந்துள்ளார். இயக்குநர் தனது வீட்டு விசேஷங்களுக்கு அழைப்பது, அவர்கள் வீட்டு விசேஷங்களுக்கு செல்வது என, கொஞ்சம் கொஞ்சமாக இவர்கள், இருவருக்கும் இடையிலான நெருக்கம் அதிகரித்துள்ளது.
நடிகை: ஒரு கட்டத்தில் இயக்குநர் நடிகையின் வீடே கதி என இருந்துள்ளார். வீடு, ஹோட்டல் என இருவரும் தடையே இல்லாமல் செம ஜாலியாக இருந்துள்ளார்கள். இதற்கிடையில் நடிகை பலமுறை கர்ப்பம் ஆகியுள்ளார். ஆனால் இயக்குநரோ இப்போது நமக்கு குழந்தை வேண்டாம். அடுத்த படத்தில் உன்னை தேசிய விருது வாங்க வைக்கிறேன். எனவே குழந்தையை கலைத்துவிடு. அந்த படம் முடிந்த பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கூறியுள்ளார். ஆனால் தான் நினைத்தது போலவே நடிகையை அடைந்தாச்சு, எனவே நடிகையை கழட்டி விடலாம் என யோசித்துக் கொண்டு இருந்துள்ளார்.
புதிய காதலி: நடிகையும் இயக்குநரின் பேச்சைக் கேட்டு, கருவை தொடர்ந்து கலைத்து வந்துள்ளார். இருவரும் கமிட்டான படம் முடிந்த பின்னர், இயக்குநர் தனது தொழிலை மாற்றிக் கொண்டார். இதனால் நடிகை என்ன ஆச்சு, ஏன் அடுத்த படம் எடுக்கவில்லை எனக் கேட்க, எனக்கு இப்போது அந்த படம் இயக்க மனமில்லை. பின்னர் பார்க்கலாம். இப்போது நான் இருக்கும் பிசினஸ் சிறப்பாக போய்க் கொண்டுள்ளது. நான் இதில் கவனம் செலுத்தலாம் என இருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.
நடுத்தெரு: மேலும் இயக்குநர் புதிதாக களமிறங்கிய தொழிலில் அவரைவிட மூத்தவர் ஒருவரின் மகளுக்கும் இவருக்கும் பழக்கம் ஏற்பட, நடிகையை கழட்டி விட்டுள்ளார். நடிகை எவ்வளவோ முயற்சி செய்தும் இயக்குநர் நடிகையை கழட்டி விட்டுவிட்டு தொழிலதிபரின் மகளை கரெக்ட் செய்வதில்தான் ஆர்வமாக இருந்துள்ளார். தொழிலதிபரின் மகளைக் கட்டிக் கொண்ட இயக்குநர் இப்போது பங்களா, பீச் ஹவுஸ் என செம ஜாலியாக இருக்கிறார். ஆனால் நடிகை நடுத்தெருவில் நிற்கிறார் பாவம்.


Click it and Unblock the Notifications











