வாரிசு நடிகருடன் ஓவர் நெருக்கம்.. இளம் நடிகை வயிற்றில் புள்ள பூச்சி.. அடுத்து நடந்ததுதான் ஹைலைட்!
சென்னை: திருமணம் ஆகி இருந்தாலும் இல்லை என்றாலும் சில சினிமா பிரபலங்கள் செய்யும் அழிச்சாட்டியங்கள் குறித்து அவ்வப்போது தகவல்கள் வந்து கொண்டுதான் உள்ளது. திருமணமான நடிகருடன் இளம் நடிகைகள் ஓவர் நெருக்கம் காட்டுவது, அதன் பின்னர் நடிகர் நடிகையை கசக்கி எடுத்து முடித்த பின்னர் கழட்டி விடுவது வாடிக்கையாக நடந்து வந்தாலும், சிலர் திருந்துகிற மாதிரி இல்லை.
சில ஆண்டுகளுக்கு முன்னர் கூட உச்ச நடிகை ஒருவர் நடிகர் மற்றும் இயக்குநராக உள்ள ஒருவருடன் ஓவர் நெருக்கம் காட்டினார். இத்தனைக்கும் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, குழந்தைகள் எல்லாம் இருந்தது. ஆனாலும் நடிகரின் ஆக்டிவிட்டி ரொம்ப பிடித்துப் போனதால், நடிகர் மீது செம கிறக்கத்தில் இருந்தார். நடிகையும் மப்பும் மந்தாரமுமாக இருந்ததால், நடிகையை கூட்டி கொண்டு வெளிநாடுகளில் கூத்தடித்த நடிகர், ஒரு கட்டத்திற்கு மேல், குடும்பம் தான் முக்கியம், புத்தி கெட்டுப் போய் இப்படி செய்து விட்டேன் எனக் கூறி நடிகையை கழட்டி விட்டார்.

அதேபோல் இன்னொரு நடிகை உச்ச நடிகரின் குடும்பத்தையே இரண்டாக மாற்றிவிட்டார். ஆனாலும் அது குறித்து எந்த கவலையும் இல்லாமல், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூசகமாக நடிகர் தனது முந்தானையில் தான் உள்ளார் என பதிவிட்டு வருகிறார். இது எல்லாருக்கும் தெரிய வேண்டும் என நடிகையும் நடிகரும் விரும்புவதால் தான் இவ்வாறு அந்த நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்படியான போஸ்ட்களை பகிர்ந்து வருகிறாராம்.
வாரிசு நடிகர்: இப்படி நடிகர்களும் நடிகைகள் வெளியில் எதுவும் தெரியாது என சேர்ந்து கூத்தடிப்பது எப்படியாவது வெளியே வந்துவிடுகிறது. அப்படியான ஒரு விஷயம்தான் இப்போது நடந்துள்ளது. அதாவது, இந்த நடிகை தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து இப்போதுதான் சில ஆண்டுகள் ஆகியுள்ளது. ஒரு படத்தில் வாரிசு நடிகருடன் இணைந்து நடித்ததில் வாரிசு நடிகரை ரொம்பவும் பிடித்துவிட்டது போல.
ஓவர் நெருக்கம்: ஆனால் வாரிசு நடிகருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தாலும் நடிகைக்கு தன் மீது இண்ட்ரஸ்ட் இருப்பதை புரிந்து கொண்டு, நடிகையை தனது பேச்சுத் திறமையால் மடக்கிப் போட்டுள்ளார். இருவரும் எத்தனை நாளைக்குத்தான் பேசிக்கொண்டு இருப்பார்கள். இருவருக்கும் இடையிலான ஓவர் நெருக்கத்தால் நடிகையின் வயிற்றில் கரு உருவாகியுள்ளது. இதைத் தெரிந்த நடிகர், கொஞ்சமும் பதட்டம் இல்லாமல், கருவைக் கலைத்து விடு என கேஷுவலாக தெரிவித்துள்ளார்.
அபார்ஷன்: அது மட்டும் இல்லாமல் நடிகர் பெரிய இடத்து ஆள் என்பதால், நடிகையை பர்சனலாக தொடர்புகொண்டு கருவைக் கலைக்க சொல்லியுள்ளார்கள். நடிகையும் கருவைக் கலைத்து விட்டார். இந்த விஷயம் எப்படியோ வெளியே வர, வாரிசு நடிகரின் வளர்ச்சியை பிடிக்காத சிலர், நடிகையை அணுகிய பேசியுள்ளார்கள். இந்த விஷயத்தை மட்டும் வெளியே சொல்லுங்க, உங்களுக்கு ஆதரவாக நாங்க இருக்கோம். உங்களை தனிப்பட்ட முறையில் கவனிப்பது என்றாலும் கவனித்துக் கொள்கிறோம் என்றெல்லாம் பேசி வருகிறார்களாம். இப்போதைக்கு நோ சொல்லியுள்ள நடிகை, ஒருவேளை மனம் மாறினால், வாரிசு நடிகரின் மானமே போய்விடும். இந்த விஷயம் இப்போது மெல்ல மெல்ல கோலிவுட்டில் பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











