மனைவியின் நடவடிக்கை பிடிக்கல.. நடிகர் ஆடிய இரண்டாவது இன்னிங்ஸ்.. இப்போது செம ஹேப்பி!
சென்னை: இந்த நடிகர் களமிறங்கிய படமே இவருக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது. சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும் இவருக்கு சினிமா வாய்ப்பு எளிதில் கிடைக்கவில்லை. மேலும் தன்னை யாரும் நெபோ கிட் எனக் கூறி விடக் கூடாது என நடிகர் பார்த்து பார்த்து படங்களில் கமிட் ஆனார். இப்படி இருந்தவர் வாழ்க்கையில் ஒரு காதலும் இருந்தது. அந்த காதலியும் சினிமா பின்புலம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் தான்.
இருவரது காதலும் நன்றாகத்தான் சென்றது. நடிகர் அப்போது நடிகைகளுடன் நெருங்கிப் பழகாமல் இருந்தார். காரணம் இவரது காதலியும் சினிமா உலகத்தை சேர்ந்தவர் என்பதால் அடங்கியே இருந்தார். ஆட்டம் போடலாம் என மற்ற நடிகர்கள் கூப்பிட்டால் கூட மாட்டேன் என கூறி விடுவாராம். ஆனால் அவரது காதலியோ நடிகருக்குத் தெரியாமல், நடிகர் வெளிநாடுகளுக்கு, வெளிமாநிலங்களுக்கு படப்பிடிப்புக்கு சென்றால் செம குஜாலாக இருப்பாராம். அதே நேரத்தில் தனது கொண்டாட்டங்கள் குறித்து நடிகருக்கு தெரியாமலும் பார்த்துக் கொள்வாராம்.
இருவருக்கும் திருமணம் ஆன பின்னர்தான் நடிகருக்கு இந்த இரவு பார்ட்டிகள் குறித்து தெரிந்துள்ளது. இதனால் என்ன செய்வது எனத் தெரியாமல் மனைவியாக மாறிய காதலியை மிரட்டி விட்டுள்ளார். அதன் பின்னர் காதல் மனைவி எந்த சேட்டைகளும் செய்யாமல் கப்சிப் என இருந்துள்ளார். காலங்கள் ஓட ஓட இருவர்களுக்கு குழந்தைகள் பிறந்தது. இதிலிருந்துதான் செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கியுள்ளது.

இது குறித்து நடிகரின் மனைவிக்கு மிகவும் தாமதமாகத்தான் தெரிய வந்துள்ளது. உடனே நடிகரை முறையிட்டு இது தொடர்பாக கேட்டதற்கு நீ மட்டும் என்ன உண்மையாவா இருக்க என கடுமையாக லெஃப்ட் - ரைட் வாங்கி விட்டுள்ளார். இப்போது நடிகர் தனது இரண்டாவது இன்னிங்ஸ்க்கு சொந்தமானவருடனே சென்றுவிட்டாராம். இதனால் அந்த நடிகரின் மனைவி செம அப்செட்டில் இருக்கிறார். ஆனால் நடிகர் இப்போது இரண்டாவது இன்னிங்ஸ் ஆடச் சென்றவருக்கு நடிகரும் இரண்டாவது இன்னிங்ஸாம். ஆனால் இருவரும் இப்போது செம ஹேப்பியாக இருக்கிறார்களாம்.


Click it and Unblock the Notifications











