வாரிசு நடிகை விரித்த வசிய வலையில் சிக்கிக் கொண்ட பிரபல இயக்குநர்.. இப்படி ஆகிப்போச்சே!
சென்னை: இந்த வாரிசு நடிகை தமிழ் சினிமாவில் மட்டும் இல்லை இந்தியாவில் பல சினிமாவில் கால் வைத்தாலும் அங்கு அவருக்கு என பெரிய ஹிட் இன்னும் அமையவில்லை. இப்போது கூட ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால் என தென்னிந்திய சினிமா பாலிவுட் சினிமா என இரண்டிலும் ஸ்கோர் செய்ய போராடி வருகிறார். இப்படியான நிலையில் இந்த வாரிசு நடிகை சக்சஸ்க்கு புது ரூட்டை பின்பற்றி இதில் கிட்டத்தட்ட வெற்றியும் அடைந்துவிட்டார் என கூறப்படுகிறது.
ஆமாம், இந்த வாரிசு நடிகைக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் ஏதாவது சொதப்பி கதாபாத்திரத்தை மட்டும் இல்லாமல், படத்தையும் சொதப்பி விடுகிறார். அப்படி இருக்கும்போது, இந்த நடிகை சரிப்பட்டு வரமாட்டார் என நினைத்து, அவரை படத்தில் இருந்து நீக்கவும் முடியாமல் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் முழிக்கிறார்கள், காரணம் நெபோடிசம் தான். இந்த நடிகை இப்போது ஒரு சக்சஸ்ஃபுல் இயக்குநருடன் செம க்ளோசா இருந்து வருகிறாராம்.
இந்த இயக்குநர் உச்ச நடிகரின் வெறித்தனமான ரசிகர். அவரை தனது படங்கள் மூலம் இம்ப்ரஸ் செய்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் சினிமாவுக்குள் வந்தார் இந்த இயக்குநர். ஆனால் இவரது அசாத்திய திறமை, அந்த உச்ச நடிகரையே இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. உச்ச நடிகரும் இயக்குநரும் இணைந்த படம் நடிகருக்கு மிகப்பெரிய வெற்றியை, வசூலை வாரிக் குவித்தது, நடிகருக்கு செம ஹேப்பி ஆகிவிட்டது. இதனால், இயக்குநருடன் மீண்டும் படத்தில் இணைய காத்துக் கொண்டு உள்ளார்.

இயக்குநர்: தான் பார்த்து வளர்ந்த நடிகரே இப்போது நம் கையில் என மகிழ்ச்சியாக இருந்த இயக்குநருக்கு, அந்த உச்ச நடிகரின் மகள் தொல்லையாக வருவார் என கனவிலும் நினைத்திருக்க மாட்டார். நடிகரும் மகளுடன் இணைந்து ஒரு படம் பண்ணுங்கள் எனக் கூற இயக்குநரும் வேறு வழி தெரியாமல், சரி என தலையை ஆட்டி உள்ளார். இங்கிருந்துதான் இயக்குநருக்கு வில்லங்கம் தொடங்கியது எனக் கூறும் அளவுக்கு இப்போது பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாம்.
நடிகை: அதாவது இந்த இயக்குநர் சினிமாவில் மிகவும் சீரியஸானவர். தனது படத்தின் வெற்றிக்காக கடுமையாக உழைக்க கூடியவர். தொடக்கத்தில் நடிகை இயக்குநருக்கு தொல்லையாகவே இருந்துள்ளார். இப்போது இந்த நடிகை இயக்குநருடன் ஒட்டிக் கொண்டு எங்கு சென்றாலும் உடன் செல்வது என இயக்குநருடன் நல்ல அட்டாச்சில் இருந்துள்ளார். அப்படி இருந்த இந்த நடிகைக்கு இயக்குநர் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதை இயக்குநரிடம் நேரடியாகச் சொன்னால் ஒர்க்-அவுட் ஆகாது என, வசிய வலையை விரித்து உள்ளார்.
வசிய வலை: நடிகை விரித்த வசிய வலை குறித்து தெரிந்து கொள்ளாத இயக்குநர், நடிகையுடன் ரொம்பவும் க்ளோஸ் ஆகிவிட்டாராம். இப்போது இருவரும் அடிக்கடி மீட்டிங், டேட்டிங் என செம ஜாலியாக இருக்கிறார்களாம். உள்ளூரில் இருந்தால் சிக்கிக் கொள்வோம் என வெளிநாடுகளுக்கு பறந்து விடுகிறார்களாம். வீட்டிலோ தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பிலே கேட்டால், லொக்கேஷன் பார்க்கச் சென்றுள்ளோம் என சமாளித்து விடுகிறார்களாம். இப்போது இயக்குநரின் மொத்த கண்ட்ரோல் நடிகை கையில்தான் உள்ளதாம். இது மட்டும் இல்லாமல், வரும் காலங்களில் இயக்குநர் எடுக்கும் படங்களில் கட்டாயம் நடிகை இருப்பார் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











