கரையை கடந்த புயல்.. இனி ஹீரோ அரிதாரம் பூசப்போவதில்லை என முடிவு

By Veera Kumar

சென்னை: ஒரு காலகட்டத்தில் ஓஹோ என புகழப்பட்டவர் அந்த புயல் நகைச்சுவை நடிகர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அவரது காமெடியை பார்த்து வாய்விட்டு சிரித்தனர்.

ஹீரோக்களை விட இவருக்கே டிமாண்ட் அதிகமாக இருந்தது. ஆனால் ஆசை யாரை விட்டது. வரலாற்று பின்புலத்தை வைத்து வெளியான படத்தில் டபுள் ஹீரோ சப்ஜெக்டில் புயல் நடிக்கப்போக, அது தாறுமாறு ஹிட் ஆனது. கதை, திரைக்கதை படு ஜோராக இருந்ததால் அந்த படம் ஓடியது என்று புரியாமல் தலைகீழாக நடக்க ஆரம்பித்தது புயல்.

இனி நடித்தால் ஹீரோதான், மற்ற கதைகள் எல்லாம் எனக்கு ஜீரோதான் என்று போர் முரசு கொட்டியது. இதற்கு நடுவே தேர்தல், பிரச்சாரம் என்று வேறு அநாவசியமாக அரசியலில் தலையிட்டு அதன்பிறகு வம்பில் சிக்கிக் கொண்டது புயல்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு புயல் ஹீரோவாக நடித்து வெளியான படமும் ஊத்திக்கொள்ளவே, இப்போது கரையை கடந்த புயல் போல அமைதி குடிகொண்டுள்ளது. இனிமேல் முதலில் இருந்தே தொடங்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ள புயல், நான் எப்போதுமே காமெடியன்தானப்பா என்ற டயலாக்குடன் கோலிவுட்டை சுற்றி வருகிறதாம். விரைவில் மீண்டும் வயிறு குலுங்க செய்வார் புயல் நடிகர் என்கிறது கோலிவுட் பட்சி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X