ஃபாரின் போன ஹீரோயினால் பறிபோனதாம் பிசினஸ்... நொந்துபோன தயாரிப்பாளர் தவிக்கிறாராமே?
சென்னை: ஹீரோயின் ஃபாரின் போனதால் பட பிசினஸ் பாதிக்கப்பட்டுவிட்டதாக கூறி வருகிறார் அந்த தயாரிப்பாளர்.
இவரும் நம்பர் நடிகைதான். சீனியர் ஹீரோயின். திருமண ஏற்பாடுகள் நடந்து, கடைசி நேரத்தில் கருத்துவேறுபாட்டால் தடைபட்டதே, அந்த ஹீரோயின்தான்.
இவர் லேட்டஸ்டாக நடித்திருக்கும் படம், நேற்று ரிலீஸ் ஆகவேண்டி இருந்தது. சரியான தியேட்டர் கிடைக்காததால், ரிலீஸ் தள்ளிப் போய் இருக்கிறது.

பைனான்ஸ் பிரச்னை
இரண்டு வருடத்துக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட படம் அது. அந்த ஹீரோயின் நடித்து ஹிட்டான வருடத்தைத் தலைப்பாக கொண்ட படத்துக்கு முன்பே இதில் நடிக்க அட்வான்ஸ் கொடுத்தார்களாம் நடிகைக்கு. இந்தப் படம் ஷூட்டிங் எப்போதோ முடிந்தாலும் பைனான்ஸ் பிரச்னை காரணமாக, கடந்த சில மாதங்களுக்கு முன்தான் ரிலீஸூக்கு ரெடியாகி இருக்கிறது.

நடிகை பிசியாம்
இந்நிலையில் படத்தின் புரமோஷனுக்கு ஹீரோயினை அழைத்து இருந்தார்கள், தயாரிப்புத் தரப்பில். பொலிட்டிக்கல் த்ரில்லர் படமான இதன் புரமோஷனுக்கு நடிகையைதான் தயாரிப்பாளர், மலைபோல் நம்பி இருந்தாராம். இதற்காகவே சம்பளத்தில் சில லட்சங்களை கொடுக்காமல் வைத்திருந்தாராம். ஆனால், நடிகை பிசியாம்.

தெலுங்கு பிசினஸ்
பிறகு படத்தின் பாடல் வெளியீடு நடந்தது, கடந்த வாரம். நடிகை ஊரிலேயே இல்லாததால் பங்ஷனுக்கு வரவில்லை. ஃபாரின் சென்று இருந்தாராம். இந்நிலையில் இந்தப் படத்தை தெலுங்குக்கு விற்க பேசியிருந்தார் தயாரிப்பாளர். அங்குள்ள தயாரிப்பாளர் ஒருவர், படத்தை ரூ.75 கோடிக்கு வாங்குவதாகக் கூறியிருந்தாராம். ஆனால், படத்தின் புரமோஷனுக்கு ஹீரோயின் வராததால், ரேட்டை குறைத்து விட்டதாகச் சொல்கிறார்கள்.

இதென்ன விளையாட்டு
அதாவது அந்த ஹீரோயின், தெலுங்கு சினிமாவிலும் நன்றாக அறிமுகம் ஆனவர். அதனால், அவரை அங்கும் புரமோஷனுக்கு பயன்படுத்தலாம் என்று நினைத்தாராம் அவர். நடிகை தமிழ் புரமோஷனுக்கே வரவில்லை என்பதால், தெலுங்குக்கும் வரமாட்டார் என்று முடிவு செய்து, இப்போது ரூ.40 லட்சம்தான் தருவேன் என்கிறாராம். இதென்ன விளையாட்டு என்று தவித்து வருகிறார் அந்த தயாரிப்பாளர்.


Click it and Unblock the Notifications











