படுக்கை அறை காட்சியால் ஒர்க் அவுட்டான கெமிஸ்ட்ரி.. இளம் நடிகருடன் நெருக்கம் காட்டும் சீரியல் நடிகை!
சென்னை: என்னத்தான் சீரியல்களில் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் இழுத்து போர்த்திக் கொண்டு நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தாலும், வெள்ளித்திரையில் வெற்றி பெற வேண்டும் என்றால், கொஞ்சம் தாராள கவர்ச்சி காட்டினால் தான் வாய்ப்பு கிடைக்கும் என்பது உண்மை தான், அதற்காக சீரியலில் குனிந்த தலை நிமிராமல் வலம் வந்த அந்த மச்ச நடிகை, இப்போது, சினிமாவில் அதிரிபுதிரி கவர்ச்சி காட்டி வருகிறார்.
ஒரு காலத்தில் சீரியலில் கொடி கட்டி பறந்த அந்த நடிகைக்கு, பல தொலைக்காட்சிகளில் இருந்து அழைப்பு வந்து அடுத்தடுத்த சிரியல்களில் நடித்து வந்தார். ஆனால், திடீரென அவருக்கு சீரியல் வாய்ப்பே இல்லாமல் போனதால், ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியிலும் இந்த பூனையும் பால் குடிக்குமா என சொல்வது போல, புடவையுடனே வந்தார். இந்த அடக்க ஒடுக்கத்தைப் பார்த்த ரசிகர்கள். பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு பெயர் எடுத்தார்.

மச்ச நடிகை: ரியாலிட்டி ஷோவில் இருந்து வெளியே வந்த கையோடு அந்த மச்ச நடிகைக்கு அடுத்தடுத்த படவாய்ப்புகள் வந்தன. அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட அந்த நடிகை, விவகாரமான ஒரு படத்தில் படுக்கை அறை காட்சியில் இயக்குநர் காட்ட சொன்னதையும் தாண்டி அதீத கவர்ச்சி காட்டி நடித்துள்ளார். அது மட்டுமில்லாமல் அந்த விவகாரமான படுக்கை அறை காட்சியில் மச்ச நடிகைக்கும், அந்த இளம் நடிகருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்கவுட்டாகி உள்ளது. இதனால், படப்பிடிப்பு தளத்தில் அந்த கசமுசா காட்சியில் இருவரும் வேண்டும் என்றே பல டேக்குகள் எடுத்துள்ளனர். இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட இயக்குநரோ, அனுபவி ராஜா அனுபவி என இந்த இளம் நடிகருக்கு பச்சைக்கொடி காட்ட அவர் புகுந்து விளையாடி விட்டார்.
தற்போது அந்த இளம் நடிகரும் மச்ச நடிகையும் அடிக்கடி சந்தித்து காதலை வளர்ந்து வருவதாக கூறப்படுகிறது. அந்த மச்ச நடிகைக்கு ஏற்கனவே திருமணமாகி, கருத்துவேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், தற்போது இளம் நடிகருடன் கைகை கோர்த்து வலம் வந்து இருப்பதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











