திருமணத்திற்கு முன் ரிலேஷன்ஷிப்.. தெரியாமல் திருமணம் செய்த நடிகர்.. கலங்கி நிற்கும் புதுப்பெண்!
சென்னை: அண்மையில் திருமணம் செய்த வாரிசு நடிகர், திருமணத்திற்கு பின் தனது காதல் மனைவி, காதலனுடன் பல ஆண்டுகள் வாழ்ந்துவந்தது தெரியவர பெரும் கவலையில் இருக்கிறார். இதனால், அந்த வாரிசு நடிகர் காதல் மணி என்றும் பாராமல் கண்டிஷன் மேல் கண்டிஷன் போட்டு வருவதாக கூறப்படுகிறது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்த அந்த வாரிசு நடிகர். பேபி நடிகையுடன் இணைந்து நடித்த போது காதல் வலையில் விழுந்தார். இருவரும் பல இடங்களில் சுற்றி திரிந்த நிலையில் காதலை பெற்றோரிடம் சொல்லி திருமணமும் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு பேபி நடிகை தொடர்ந்து நடித்து வந்தார். வாரிசு நடிகர் தெலுங்கு சினிமாவில் அடுத்தடுத்து படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் தவித்துக் கொண்டு இருக்க பேபி நடிகையோ தெலுங்கு, மலையாளம், சினிமா என அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தார்.

பிரிந்தனர்: ஆனால் வாரிசு நடிகரோ தனக்கென ஒரு முன்னணியிடத்தை பெற முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தார். இதனால் இருவருக்கும் இடையே அவ்வப்போது ஈகோ பிரச்சனை உண்டானது. அதுமட்டுமல்லாமல் பேபி நடிகையை குழந்தை பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளனர். ஆனால், அந்த நேரத்தில், பேபி நடிகை பீக்கில் இருந்ததால் குழந்தை பிறப்பை தள்ளி வைத்துள்ளார். இதுவும் இவர்களின் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனையை ஏற்படுத்தியதால், இருவரும் பிரிந்துவாழ்ந்தனர். ஒரு கட்டத்தில் விரிசல் அதிகமாகி இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
காதலருடன் வாழ்ந்தார்: இவர்களின் பிரிவுக்கு பல காரணங்கள் கூறப்பட்ட போதும் இருவரும் இதுகுறித்து எந்த விதமான கருத்துகளையும் தெரிவிக்காமல் இருந்தனர். இதையடுத்து வாரிசு நடிகர் ஒரு நடிகையுடன் அவ்வப்போது டேட்டிங் செல்வதாகவும் செய்திகள் பரவியது. அதன் பின் அந்த நடிகையுடன் நிச்சயதார்த்தமும் நடைபெற்று திருமணமும் நடந்தேறியுள்ளது. ஆனால், தற்போது பிரச்சனை என்னவென்றால், வாரிசு நடிகர் திருமணம் செய்த அந்த வனப்பு நடிகைக்கு ஏற்கனவே ஒரு காதலர் இருந்ததும் அந்த காதலருடன் பல ஆண்டுகள் அவர் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததும் மீடியாக்கள் மூலம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதால், அந்த வாரிசு நடிகர் திருமணமான முதல் நாளே இதுபற்றி கேட்டுள்ளார்.
கலங்கி நிற்கும் புதுப்பெண்: கேட்டது மட்டுமில்லாமல், கவர்ச்சியாக நடிக்க கூடாது, திரைப்படங்களில் முத்தக்காட்சி, படுக்கையறை காட்சி என எந்த விதமான காட்சிகளிலும் நடிக்க கூடாது, படத்தின் கதையை, அதில் நடிக்கும் ஹீரோ யார் என்பது குறித்து முன்பே சொல்லிவிட வேண்டும் என மனைவிக்கு கண்டிஷன் மேல் கண்டிஷன் போட்டுள்ளார். இதனால், அந்த வனப்பு நடிகை சங்கடத்திற்கு உள்ளாகி,கலங்கி நிற்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











