Don't Miss!
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- News மன்னிப்பு விளம்பரம் பெருசா இருக்கா? இல்லை லென்ஸில் தான் தேடணுமா? பதஞ்சலிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Finance கிரெடிட் கார்டு: கரெக்டா யூஸ் பண்ணா.. இதைவிட பெஸ்ட் எதுவும் கிடையாது.. நோட் பண்ணுங்கப்பா..!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அதை மறப்போம், இதை தொடங்குவோம்... உசர ஹீரோவுடன் மீண்டும் காதலைத் தொடங்கிட்டாராமே பிரபல ஹீரோயின்!
சென்னை: அந்த ஹீரோயின் தனது முன்னாள் காதலனுடன் மீண்டும் நெருங்கத்தைத் தொடர்கிறார் என்கிறார்கள் கோலிவுட்டில்.
அந்த மூன்றெழுத்து நம்பர் நடிகை, அந்த தெலுங்கு ஹீரோவை காதலித்து வந்தார். சினிமா விழாக்களுக்கு இருவரும் ஒன்றாகவே வந்துசென்றனர்.
இதுபற்றி செய்தியாளர்கள் கேட்டால், மவுனத்தை மட்டுமே பதிலாக்கிச் செல்வார்கள்.
காதல் பற்றி
இந்நிலையில், 'அவர் என் தோழி, சென்னை வந்தால் அவர் வீட்டுக்குத்தான் நேராகச் செல்வேன் என்று கூறியிருந்தார், அந்த தெலுங்கு ஹீரோ. பிறகு மும்பை டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அந்த ஹீரோவிடம் இந்த நடிகையுடனான காதல் பற்றிக் கேட்டபோது, வெளிப்படையாகவே தாங்கள் காதலில் விழுந்தது உண்மைதான் என்று தெரிவித்திருந்தார்.
தொழிலதிபர்
பத்து வருடமாக நட்பாக இருந்தோம். சில காலம் டேட்டிங்கில் இருந்தோம். ஆனால் அது ஒர்க் அவுட் ஆகவில்லை என்று கூறி இருந்தார். இது அப்போது பரபரப்பானது. இந்நிலையில், இருவரும் பிரிந்தனர். பின்னர் சில படங்களை தயாரித்த அந்த தொழிலதிபரைக் காதலித்து வந்தார் நடிகை. இருவரும் கல்யாணம் வரை சென்றனர். நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் திடீரென நின்றது திருமணம்!
நடிகையின் அம்மா
பிறகு படங்களில் கவனம் செலுத்திய அந்த ஹீரோயின், காதல், கல்யாண விவகாரங்களில் இருந்து விலகியே இருந்தார். இருந்தாலும் நடிகைக்கு வயசாகிக் கொண்டே இருக்கிறதே... என்ற கவலை, நடிகையின் தாய்குலத்துக்கு இருக்கிறது. இந்நிலையில்தான் நடிகை, அந்த ஹீரோவுடன் தனது காதலை மீண்டும் புதுப்பித்திருக்கிறாராம்.
கல்யாணம் வரை
இருவரும் இப்போது அடிக்கடி தனியாக பேசிக் கொள்கிறார்களாம். சென்னை வந்தால், ஹீரோ பழையபடி நடிகையின் வீட்டுக்குத்தான் செல்கிறாராம். இப்போது லாக் டவுன் நடக்கும் நேரத்தில் கூட அந்த ஹீரோவுடன் தான் போனில் பேசி பொழுதை கழிக்கிறாராம். இந்த காதல் மீண்டும் தொடர்ந்து கல்யாணம் வரைச் செல்ல வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் கோலிவுட்டில்!