முதல் பட இயக்குநரிலிருந்து அமைச்சர்வரைக்கும் விருந்தான நடிகை?.. பயங்கர ஆளா இருந்துருக்காங்களே
சென்னை: தனது முதல் பட இயக்குநரிலிருந்து அமைச்சர்வரைக்கும் நடிகை ஒருவர் விருந்தானாராம்.
அந்த நடிகை இப்போது சீனியர் நடிகையாகிவிட்டார். அவர் இளமையில் இருந்தபோது அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. குண்டு கண்கள், மலர்ந்த சிரிப்பு என்று தமிழ்நாட்டு பெண்ணுக்குரிய லட்சணங்களோடு தோன்றியவர் அவர். சென்னையில் பிறந்த அவர் அடிப்படையில் ஒரு நடன கலைஞர் என்பதால் நளினங்கள் எல்லாம் இயல்பாகவே அவருக்கு வந்துவிட்டன.

முதல் படம்: பலரை உருவாக்கிய மூத்த இயக்குநரின் இயக்கத்தில்தான் முதல் படத்தில் அறிமுகமானார். முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதனால் அடுத்தடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன. கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடி போட்டு நடித்து பல ரசிகர்களை வளைத்துப்போட்டார்.
விவாகரத்து: தனது கரியர் உச்சத்தில் இருந்தபோதே திடீரென திருமணம் செய்துகொண்டு வெளிநாடு பறந்துவிட்டார் அம்மணி. ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை நடிகையின் திருமண வாழ்க்கை சரியாக இல்லை. அதற்கு யூகங்களாக பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் நடிகை இதுவரை திருமண வாழ்க்கை முறிவு பற்றி எதுவுமே சொல்லவில்லை. இரண்டாவது திருமணம் பற்றியும் அம்மணி எந்த முடிவும் எடுக்கவில்லை.
கூச்சம் போக்க வேலை: சூழல் இப்படி இருக்க அந்த நடிகை பற்றி இப்போது பல விஷயங்கள் கிசுகிசுக்கப்படுகின்றன. அதாவது நடிகை அறிமுகமான முதல் படத்தில் ரொம்பவே கூச்சப்பட்டாராம். இயக்குநரும் எவ்வளவு முயன்றும் நடிகையின் கூச்சத்தை போக்க முடியவில்லையாம். என்ன செய்வதென்று யோசித்த இயக்குநர் நடிகையுடன் ரொம்பவே நெருங்கி பழகினாராம். நெருக்கம் என்றால் சாதாரண நெருக்கம் இல்லை அனைத்தையும் கடந்த நெருக்கம்.
அதுமட்டுமின்றி நடிகைக்கு விதவிதமான கிளாமர் உடைகளையும் வாங்கிக்கொடுத்து வீடியோவும் எடுத்து வைத்துக்கொண்டாராம். முக்கியமாக எல்லா இயக்குநர்களும் தன்னுடைய உதவி இயக்குநர்களிடம்தானே கதை குறித்த டிஸ்கஷன் செய்வார்கள். ஆனால் இந்த இயக்குநர் மட்டும் அந்த நடிகையுடன் டிஸ்கஷன் செய்கிறேன் என்று சொல்லி ரூமுக்கு கொண்டு போய்விடுவாராம். ஒருவழியாக நடிகைக்கும் கூச்சம் போய்விட்டதாம்.
அமைச்சருக்கு விருந்து: கூச்சத்தை எல்லாம் விட்டுவிட்டு நடிக்க ஆரம்பித்த நடிகை ஒரு அமைச்சரின் கண்ணையும் உறுத்திக்கொண்டே இருந்தாராம். உடனே நடிகையை அந்த அமைச்சர் வளைத்துப்போட்டுக்கொண்டதாக ஒரு செய்தி அப்போதே பரவியதாம். அதனை பயன்படுத்திக்கொண்ட நடிகை ஒரு பிரமாண்ட படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது நிர்வாண காட்சியில் நடிக்க மறுக்க; இயக்குநர் ஏற்கனவே இது பேசியதுதானே என சொல்லி சம்மதிக்க வைக்க முயன்றாராம்.
ஆனால் நடிகையோ அதெல்லாம் முடியாதுனா முடியாது என்று சொல்லி கேரவனுக்கு சென்று அப்போதைய அமைச்சருக்கு ஃபோனை போட்டாராம். உடனே அமைச்சரின் அடியாட்கள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து இயக்குநரை மிரட்டிவிட்டு சென்றாராம். இப்படி அந்த அமைச்சரின் கட்டுப்பாட்டில்தான் பல காலம் அவர் இருந்தார் என்றும்; அந்த அமைச்சரின் மூலம் ஏகப்பட்ட சொத்துக்களை சுருட்டியிருக்கிறார் என்றும் கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.


Click it and Unblock the Notifications











