நடிகையின் அம்மா கையில் அத்தாரிட்டி.. கழட்டிவிடப்பட்ட ஹீரோ.. நடிப்பை நம்பி நாசமாய் போன நடிகர்!
சென்னை: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக கால் பதித்து, பின்னாளில் திரையுகில் மாஸ் நடிகராக இருக்கும் உச்ச நட்சத்திரங்களின் படங்களில் நண்பனாகவும், மிரட்டலான வில்லனாகவும் நடித்தினார் அந்த துடிப்பான நடிகர். குணச்சித்திர வேடமோ, வில்லத்தனமோ எதுவாக இருந்தாலும் தனது அசாத்தியமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர். குணசித்திர நடிகராக கலக்கி வந்த அந்த நடிகர், ஒரு கட்டத்தில் ஹீரோவாக மாறி, தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார்.
உச்சத்தில் இருந்து சரிந்த மார்க்கெட்: அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நிற்க கூட நேரம் இல்லாமல், ஒரு நாளைக்கு மூன்று ஷிப்டுகளில் வெவ்வேறு படப்பிடிப்புகளில் நடித்து வந்தார். குறுகிய காலத்திலேயே 20க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்தார். இப்படி கோலிவுட்டில் டாப் கியரில் போய்க்கொண்டிருந்த அந்த நடிகரின் திரைப்பயணம், திடீரென பிரேக் போட்டது போல திடீரென நின்றது. இப்போது அவர் எங்கு இருக்கிறார், என்ன செய்கிறார் என்றே தெரியாத அளவிற்கு திரையுலகை விட்டு ஒதுங்கிவிட்டார்.

முழுக்கட்டுப்பாட்டில் நடிகர்: துடிப்பான நடிகரின் அதிர்ச்சிகரமான திரைமறைவுக்கதை காரணமே அந்த அம்மா தானாம். திரையுலகில் வளர்ந்த ஒரு இளம் நடிகையின் அம்மாவுடன், துடிப்பான நடிகருக்கு மிக நெருக்கமான தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்த நடிகரின் ஒட்டுமொத்த கால்ஷீட், சம்பள விவகாரங்கள், கதை டிஸ்கஷன் என அனைத்தையும் அந்த ஆண்ட்டிதான் தன் கைக்குள் வைத்திருந்தாராம். இதனால், இயக்குநர்களால் அவரை எளிதில் தொடர்பு கொள்ள முடியாமெல் போய் உள்ளது. அதோடு மட்டுமில்லாமல் கதை சொல்ல வந்தவர்களை நடிகர் கையாண்ட விதம் மற்றும் தவறான முடிவுகளால் நடிகரின் மார்க்கெட் மெல்ல மெல்ல சரியத் தொடங்கியது.
திடீர் மாயம்: ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் முற்றிலும் குறைந்து, மார்க்கெட் சரிந்தவுடன், இத்தனை நாட்களாக துடிப்பான நடிகரை அரவணைத்து பாசம் காட்டி வந்த அந்த ஆண்ட்டியும் டாடா காட்டிவிட்டு சென்றுவிட்டதால், நடிப்பை பாசம் என நம்பி ஏமாந்துவிட்டோமோ என்று வேதனை அடைந்த அந்த நடிகர், லைம்-லைட்டை விட்டு அப்படியே காணாமல் போய்விட்டார். அப்போதும் கூட அந்த நடிகர் எங்கு இருக்கிறார், என்ன செய்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை.


Click it and Unblock the Notifications