புது வாழ்க்கையில், கழற்றிவிட்ட காதலர்.. தீரா காதலில் விடிய விடிய போதை.. கதறித் துடிக்கும் ஹீரோயின்!
சென்னை: காதலித்து கழற்றிவிட்ட அந்த காதலர், சந்தோஷ வாழ்க்கையில் இருப்பதால், நித்தம் போதையில் கதறித் துடிக்கிறாராம், அந்த நடிகை.
காதலுக்கும் மோதலுக்கும் பஞ்சமே இருக்காது சினிமாவில். திடீரென்று சிலரை பற்றி கிசு கிசு வரும். பிறகு மாறும்.
யாரும் எதிர்பார்க்காத வகையில் சிலர் திடீரென திருமணமும் செய்து கொள்வார்கள்.

கடவுளின் தேசம்
ஆரம்பத்தில், சினிமாவில் மட்டுமே இருந்த இதுபோன்ற திக் திடுக் விஷயங்கள், இப்போது சின்னத்திரை வட்டாரத்திலும் அதிகரித்திருக்கிறது என்கிறார்கள். அது இருக்கட்டும். இது வேறு, காதல் கதை. அந்த இளம் நடிகை, தமிழ் சினிமாவில் ஜிவ்வென்று வளர்ந்து வந்தார். கடவுளின் தேசம் அனுப்பிய பல நூறு நடிகைகளில் அவரும் ஒருவர்.

பிரபலமான நிகழ்ச்சி
சின்ன சின்ன படங்களில் நடித்து வந்தவருக்கு பெரிய பட வாய்ப்புகள் வந்த நேரத்தில் என்ன நடந்ததோ, நடிகையின் மார்க்கெட் டப்பென்று சரிந்துவிட்டது. அவரது சொந்த ஊரிலும் வாய்ப்புகள் இல்லை. சில வருட இடைவெளிக்குப் பிறகு அந்த பிரபலமான நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதற்கு பிறகு அவருக்கு ரசிகர்கள் கண்டபடி உருவாகினர்.

காதலில் விழுந்தார்
சமூக வலைதளங்களில் பிரபலமானார். அதெல்லாம் சினிமா வாய்ப்பாக மாறும் என்று எதிர்பார்த்தார். சில வாய்ப்புகள் மட்டுமே வந்தன. அதுவும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இந்நிலையில் அந்த இளம் நடிகருடன் காதலில் விழுந்தார். காதல் நியூஸ் பரவிய வேகத்திலேயே டொப்பென்று முறிந்தும் விட்டது, காதலும்.

தீரவே இல்லையாம்
அதற்குப் பின்னால் என்ன நடந்ததோ தெரியவில்லை. நடிகை அப்செட். பிறகு நாங்க லவ் பண்ணவே இல்லையே, சும்மா பிரண்ட்ஸ்தான் என்று விளக்கம் அளித்தார். இருந்தாலும் அந்த காதல் ஏக்கம் தீரவே இல்லையாம் நடிகைக்கு. இதனால் மதுவின் துணை தேடினார் நடிகை. கொஞ்சம் கொஞ்சமாக ஏறிய பழக்கம், மொத்தமாக மாறிப்போனதாம்.

மட்டையாகும் வரை
இந்நிலையில் முன்னாள் காதலர் புது வாழ்க்கையில் இணைந்தார் சமீபத்தில். இதுபற்றி அறிந்து, ஒரு மாதத்துக்கு முன்பு, லவ் பற்றி வெறுப்புப் பதிவு போட்டார் நடிகை. இருந்தும் காதல் வலி ஆறாத நடிகை, மட்டையாகும் வரை மதுவென மயங்கிக் கிடக்கிறாராம். இந்தப் போதையில் காதல் பற்றி கண்டபடி கதறுவதாகவும் சொல்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











