Don't Miss!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
அந்தப் படத்தில் நடிப்பதற்கு.. இந்த ஒரே காரணத்துக்காகத்தான் எல்லா ஹீரோயினும் நோ சொல்றாங்களாம்!
சென்னை: அந்தப் படத்தில் நடிப்பதற்கு ஒரே ஒரு காரணத்துக்காக மட்டுமே பல ஹீரோயின்கள் நடிக்க மறுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
பிரபலங்களின் வாழ்க்கைக் கதையை படமாக்குவது இப்போது சினிமா டிரெண்ட்.
சினிமா நடிகர், நடிகைகள், அரசியல் தலைவர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் வாழ்க்கையை படமாக்க தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்
இந்த கொரோனாவுல.. மாநாடு படத்துக்கு எப்படி கூட்டத்த கூட்டப் போறேனோ.. இது வெங்கட் பிரபு புலம்பல்!
வரவேற்பைப் பெற்றன
ஏற்கனவே உருவான பல பயோபிக் படங்கள் வசூலை அள்ளித் தந்திருப்பதால் அதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள், இயக்குனர்களும். தமிழ் சினிமா மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பயோபிக் டிரெண்ட், பாடாய் படுத்தி வருகிறது. தற்போது கூட தலைவி உட்பட பத்துக்கும் மேற்பட்ட பயோபிக் படங்கள் லைனில் காத்திருக்கின்றன. அதில் ஒன்றுதான் அந்த வீராங்கனையின் படமும்!
அகர்வால் நடிகை
அந்தப் படத்தில், பாலிவுட்டிலும் தென்னிந்திய சினிமாவிலும் அறிமுகமான சில நடிகைகளை நடிக்க வைக்க முதலில் முடிவு செய்தார்கள். அப்படி இருந்தால், தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட மற்ற மொழிகளிலும் வியாபாரம் செய்ய வசதியாக இருக்கும் என நினைத்தார்கள். அதனால் அந்த அகர்வால் நடிகை, ஐதராபாத்தில் செட்டிலாகிவிட்ட சிங் நடிகை உள்பட சில ஹீரோயின்களிடம் பேசினார்களாம்.
பாலிவுட் நடிகைகள்
விஷயத்தைக் கேள்விபட்ட ஹீரோயின்கள் யோசித்துச் சொல்கிறோம் என்று சொல்லி விட்டார்களாம். பிறகு தெலுங்கு ஹீரோவை திருமணம் செய்துகொண்டு ஐதராபாத்தில் வசித்து வரும் அந்த ஹீரோயினிடமும் கேட்டார்களாம். அவர் தவிர மேலும் சில ஹீரோயின்களிடம் கேட்டிருக்கிறார்கள். இதில் சில பாலிவுட் நடிகைகளும் உண்டு.
தலைப்பைக் கேட்டதும்
யாருமே, கதையை கேட்டுவிட்டு ஓகே சொல்றேன் என்றெல்லாம் கூறவில்லை. தலைப்பைக் கேட்டதுமே யோசிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். ஏனென்றால் படத்தின் ஹீரோயினாக நடிப்பவர், பளு தூக்க வேண்டும். அதையாவது டம்மியாக காண்பித்துக் கொள்ளலாம். ஆனால், உடல் எடையை அதிகரித்து, கைகால்களில் கட்ஸ் தெரியுமாறு இருக்க வேண்டும் என்று சொல்கிறார்களாம்.
பாகுபலி நடிகை
இதுதான் இப்போது பிரச்னையாகி இருக்கிறது, பல நடிகைகளுக்கு. ஏற்கனவே பாகுபலி நடிகை, ஒரு படத்துக்காக உடல் எடையை அதிகரித்து பிறகு குறைக்க முடியாமல் அவஸ்தைப் பட்டார். அதை உதாரணத்துக்குச் சொல்லும் அந்த ஹீரோயின்கள், அந்த விளையாட்டு வீராங்கனையின் பயோபிக்கில் நடிக்கத் தயங்கி நோ சொல்லிவிட்டார்களாம். என்ன செய்வது என்று தவித்து வருகிறது அந்த தெலுங்கு தயாரிப்பு!