Don't Miss!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வார்த்தைய பிடுங்கிடுவாங்க.. நமக்கேன் வம்பு.. விழாவுக்கு நடிகர் போகாததுக்கு இதுதான் காரணமாம்!
மூத்த நடிகர் விழாவை பிரபல நடிகர் புறக்கணித்ததற்கு காரணம் இது தான் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: மூத்த நடிகர் விழாவில் பிரபல நடிகர் வருவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி வரை அமைதியாக இருந்து விட்டு, சத்தமில்லாமல் தனக்குப் பதில் பெரியவரை அனுப்பி விட்டு எஸ்கேப் ஆகி விட்டார்.
வர முடியாததற்கு அவர்கள் சொன்ன காரணம்தான் பெரிய காமெடி. தலைநகரில் இருப்பதால் வர முடியவில்லை என்றார்கள். வெளிநாட்டில் இருந்தால்கூட பரவாயில்லை. விமானத்தில் பறந்து வந்தால், இரவே கூட திரும்பி விடும் தூரம் தான் அவர் இருந்த இடம். அப்படி இருந்தும் நிகழ்ச்சியைப் புறக்கணித்ததற்கு காரணமே வேறாம்.
சமீபகாலமாக தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் எதையாவது எக்குத்தப்பாகப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தி விடுகிறார் நடிகர். தற்போது இந்த விழாவில் கலந்து கொண்டாலும், நிச்சயம் மைக் கிடைக்கும், தானும் ஏதாவது வாயைக் கொடுத்து புண்ணாக்கிக் கொள்வோம் என்று தான் நாசுக்காக மறுத்து விட்டாராம்.
அதோடு தான் பேச நினைத்ததை பெரியவரை பேச வைத்து விட்டார். எனவே ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த பலன் கிடைத்து விட்டது. தான் பேச முடியாததைக் கூட அவர் பேச முடியும் என்பதால் தான் இந்த ஏற்பாடு என்கிறார்கள் விசயம் தெரிந்தவர்கள்.
எப்போதும் தனது நிகழ்ச்சிகளில் ஹைலைட்டே நடிகர் பேச்சாகத்தான் இருக்கும். நேற்று அவர் பேசியிருந்தாலும் அவ்வளவாக எடுபட்டிருக்காது. அதனாலும் தான் நாசுக்காக மறுத்து விட்டார் என்கிறார்கள்.