மனசு ரொம்ப புண்ணாகிடுச்சாம்.. வெளியே வராத பாஸ் நடிகர்.. டூப்பை வைத்து ஒப்பேற்றும் பிரம்மாண்டம்?
சென்னை: தனது படங்களில் அதிகமாக டூப்பை பயன்படுத்த அந்த பாஸ் நடிகருக்கு பிடிக்கவே பிடிக்காது. ஆனால், சமீப காலமாக அதிகமாக டூப்பை பயன்படுத்த ஆரம்பித்து இருப்பதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.
இதுவரை இல்லாத அளவுக்கு நடிகரின் பெயர் இந்த முறை ரொம்பவே டேமேஜ் ஆகி வரும் நிலையில், அவருக்கு எதிரான சதிகளும் அரங்கேறி வருகிறது என்கின்றனர்.

இந்நிலையில், மனசு கஷ்டத்தில் நடிகர் இருப்பதாகவும் அதன் காரணமாக தனக்கு பதில் டூப்பை பயன்படுத்திக்கோங்க என்றே சொல்லி விட்டதாகவும் பரபரப்பு தகவல்கள் கசிந்துள்ளன.
கட்டம் கட்டிட்டாங்க: எத்தனையோ பிரச்சனைகளை சந்தித்து எத்தனையோ பேர்களை சமாளித்து வந்த பாஸ் நடிகர் இந்த முறை தன்னையே ஏமாற்றி விட்டார்களா? என்கிற குற்ற உணர்ச்சிக்கு ஆளாகி உள்ளதாகவும் அவருக்கு எதிராக பலரும் திரண்டு கிடைத்து வரும் பெரிய சம்பளத்துக்கு வேட்டு வைக்க போறதாகவும் பேச்சுக்கள் அடிபடத் தொடங்கி உள்ளது.
மனசு புண்ணாகிடுச்சு: நடிகரின் மனசு இந்த விஷயத்தில் ரொம்பவே புண்ணாகி உள்ளதாகவும் கூறுகின்றனர். வீட்டை விட்டு வெளியே சில நாட்கள் வர முடியாத சூழல் இருப்பதாகவும் படப்பிடிப்பு திட்டமிட்டபடி வரமாட்டேன் என்றும் கூறி விட்டதாக திடுக்கிடும் தகவல்கள் கசிந்துள்ளன.
டூப்பை வைத்து: இதுவரை நடிகர் இப்படி சொன்னது இல்லையே என நினைத்த பிரம்மாண்டம் சரி இனியும் அவருக்காக டைம் வேஸ்ட் பண்ணக் கூடாது என நினைத்து டூப்பை வைத்து சேசிங் காட்சிகளை எடுத்து வருவதாக கூறுகின்றனர். நடிகர் தான் நடிக்கிறார் என ஆசையுடன் ஷூட்டிங் பார்க்க சென்ற ரசிகர்களுக்கு கிட்டே போனதும் வேறு நபர் நடித்து வருவதை அறிந்து ஷாக் ஆகி விட்டனராம்.
களமிறங்கிய ஆட்கள்: பாஸ் நடிகர் திடீரென இப்படி அப்செட் ஆகி உள்ள நிலையில், அவரது ஆட்கள் அவருக்கு எதிரான பிரச்சனைகளை சரி செய்ய களமிறங்கி இருப்பதாகவும் கூடிய விரைவிலேயே மீண்டும் பாஸ் நடிகர் பழையபடி புத்துணர்ச்சியுடன் கலக்குவார் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











